Sunday, June 23, 2013

கண்ணன் துணை இருப்பான்! சந்தோஷமான செய்தி!

ஒரு பத்துநாட்களாகவேக் கடுமையான உழைப்பு. :))) கண்ணன் கதையின் முதல் பாகத்தை எடிட் செய்து தொகுத்துக் கொண்டு அவற்றைப் பிரின்ட் அவுட் எடுக்க ஆரம்பித்தேன்.  பாரதீய வித்யா பவன் சென்னை அலுவலகத்தில் 22 ஜூன் சனிக்கிழமை மதியம் டைரக்டர் என்னைச் சந்திக்க நேரம் ஒதுக்கி இருந்தார்.  ஆகவே குறைந்த கால அவகாசத்தில் முடிக்கணும். பிரிட் அவுட் எடுத்துக் கொண்டு எதுக்குத் தொந்திரவு?  பென்டிரைவிலோ சிடியோ போடலாம்னு சொல்றவங்களுக்கு!  போடலாம் தான்.  அது தெரியும்.  ஆனால் அதைக் கணினியில் தான் போட்டுப் பார்க்க முடியும். சிலர் பிடிஎப் கோப்பாக அனுப்பி வைனும் சொன்னாங்க.  அதைப் பார்ப்பாங்களா உடனடியாகனு சந்தேகம்.  ஆகவே நம் கையே நமக்கு உதவினு வீட்டிலேயே பிரின்ட் அவுட் எடுக்க ஆரம்பித்தேன்.

எடிட்டிங் வேலை முடியவே மூணுநாள் ஆச்சு.  அப்படியும் வேர்ட் நிறைய ஸ்பெல்லிங் தப்புப் பண்ணி இருக்கேனு திட்டிட்டும் இருந்தது.  கூடியவரை எல்லாத்தையும் சரி பண்ணினேன்.  பிரின்ட் அவுட் எடுக்கிறச்சே இரண்டு முறை இங்க் தீர்ந்து போய், ஒரு தரம் இங்க் திரும்ப நிரப்பினது சரியா வராமல் போய், அதுக்குள்ளே சென்னை கிளம்பும் நாளும் வந்துவிட்டது. சனிக்கிழமை சென்னை கிளம்பணும்.  வியாழனன்று பிரின்டர் வேலை நிறுத்தம் மெகானிக்கைக் கூப்பிடவும் என் அவசரம் தெரிந்ததால் அவரும் வந்து கிட்டேயே இருந்து வேலையை முடிக்கிற வரை பிரின்டரைத் தட்டிக் கொடுத்து கவனித்துக் கொண்டார்.  பின்னர் அன்னிக்கே சாயந்திரமாப் போய் பைன்டிங் செய்யக் கொடுத்து வெள்ளிக்கிழமை ஈரம் காயும் முன்னே வாங்கி வந்து கொண்டு போகும் பையில் அடியில் வைத்து மேலே அழுத்தம் கொடுத்துவிட்டோம்.

சனிக்கிழமை காலை பல்லவனில் கிளம்பினோம்.  அன்னிக்குனு வண்டி தாமதம். அரை மணி நேரம்.  ஒரு மணிக்குள்ளாக வித்யாபவனின் இருக்கணும். ஒரு வழியா மாம்பலத்தில் இறங்கி ஆட்டோ வைத்துக்கொண்டு வித்யாபவன் போகையிலே பனிரண்டே முக்கால்.  டைரக்டர் மீட்டிங்கில் இருந்தார் எனினும் நான் வந்திருக்கும் செய்தி சொல்லப்பட்டுக் காத்திருக்கச் சொன்னார்.  பின்னர் அவரே வெளியே வந்து காத்திருக்கச் சொல்லிவிட்டு வந்தவர்களை வழி அனுப்பிட்டு, மற்றவர்களைக் கவனித்துவிட்டு எங்களை அழைத்தார்.  கொண்டு போன புத்தகத்தைக் கொடுத்தோம்.  படித்ததில் அவருக்குத் திருப்தி என்பது முகத்திலேயே தெரிந்தாலும் அவர் வாய் மூலம் சொல்லணும்னு இருந்தோம்.

 பப்ளிஷிங் பத்திப் பேசிவிட்டுப் பின்னர் என்னிடம் உங்கள் ஆர்வமும், எழுதி இருக்கும் நடையும் தேர்ந்த எழுத்தாளரின் எழுத்தைப் போல் இருக்குனு பாராட்டிவிட்டு எங்களுக்கு நேரேயே பவன் மூலம் பப்ளிஷ் பண்ணலாமா, அல்லது நாங்க இன்வெஸ்ட் பண்ணிட்டு பவன் மூலம் வெளியீடு பண்ணலாமானு இரண்டு கருத்தையும் அவங்களுக்கு அனுப்பி இருக்கார். எப்படி இருந்தாலும் பவன் மூலம் வெளியீடு செய்வதில் அவருக்கு ஆக்ஷேபணை இல்லைனு தெரிந்தது.  மேலும் இப்போது முன்ஷிஜி அவர்களின் 125 ஆவது பிறந்த நாளுக்கான கொண்டாட்டங்களுக்கான வேலைகள் வேறு செய்வதால் அதை ஒட்டி வெளியிடலாம் என்றும் கூறி உள்ளார்.  இனி எல்லாம் கண்ணன் கையில்.  அடுத்து இரண்டாம் பாகம் எடிட்டிங் செய்து அதைப் பென்டிரைவ் அல்லது, சிடியில் எடுத்துடலாம்னு எண்ணம்.  அதோடு டைரக்டர் அறையிலோ ரிசப்ஷனிலோ கணினியோ, மடிக்கணினியோ இல்லை.  ப்ரின்டிங் செக்‌ஷனில் மட்டும் இருக்குமோ என்னமோ!  நல்லவேளையா பென் டிரைவ் கொண்டு போகலை.  போட்டுப் பார்க்கிறேன்னு சொல்லி இருப்பாரே! :))))

போகப் போகத் தெரியும்.  கண்ணன் துணை இருப்பான் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.  இதன் முழுப் பலனும் திவாகரையே சேர்ந்தது.  அவருடைய தூண்டுதல் இல்லை எனில் இந்த மொழிபெயர்ப்பு வேலையை ஆரம்பித்திருப்பேனா என்பது சந்தேகமே.  அதே போல் இப்போது வித்யாபவனை நாடுவதற்கும் பெருமளவு உதவிகள் செய்தார்.  மொத்தத்தில் இந்த மொழிபெயர்ப்பே அவருக்குச் சமர்ப்பிக்க வேண்டிய ஒன்று.

6 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...



"கண்ணன் துணை இருப்பான்!”

சந்தோஷமான செய்தி தான்.

மனமார்ந்த பாராட்டுக்கள்.

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

பின் குறிப்பு இந்த பகிர்வில் காணோம்...

எல் கே said...

hearty wishes

ஸ்ரீராம். said...

பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

raki said...

dear madam

namasthe

any news about bvb publishing the same

would like to know the details for my sister and mother

r radhakrishnan

sambasivam6geetha said...

Mr.Raki, I do not understand. What do you want to know? contact me via mail. Thank You.