Saturday, October 11, 2014

சுஷர்மன் கோபம்; கண்ணன் சாந்தம்!

“ஹூம், படகுகள் எப்படி ஓட்டையாயின என அறிவாயா கோவிந்தா?  அவை ஒருவரின் கட்டளையின் பேரில்  ஓட்டை ஆயின! அல்ல…. அல்ல விருப்பத்தின் பேரில் ஓட்டையாயின.  நான் என்ன செய்வது என்று எனக்குப் புரியவில்லை.”


கிருஷ்ணன் அவன் தோள்களைப் பிடித்து அழுத்தி ஆறுதல் சொன்னான். இருவரும் சேர்ந்தாற்போல் நதிக்கரையை நோக்கி ந்நடக்க ஆரம்பித்தனர். கண்ணன் பேச ஆரம்பித்தான்.


“இது மிக துரதிர்ஷ்டவசமானது.  நாங்கள் ஹஸ்தினாபுரம் வந்தடைவதற்குள்ளாக நீங்கள் அங்கே போயாகவேண்டும் அல்லவா?  உன்னை உடனடியாக ஹஸ்தினாபுரம் வரச் சொல்லி துரியோதனன் அவசரச் செய்தி அனுப்பி இருக்கிறான் எனக் கேள்விப் பட்டேனே!”


“ஆம், நாங்கள் விரைவில் ஹஸ்தினாபுரம் சென்றடைய வேண்டும்.  துரியோதனன் அதில் மிக ஆர்வம் காட்டுகிறான்.  எங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறான்.  நீங்களெல்லாம் வருவதற்குச் சில நாட்கள் முன்னாலேயே அவன் எங்களை அங்கே எதிர்பார்க்கிறான்.  இப்போது நாங்கள் இங்கே தடுத்து நிறுத்தப்பட்டோம்.  நாங்கள் உங்களுடன் தான் வந்தாகவேண்டும்.  வேறு வழியில்லை.  கடவுளே, மஹாதேவா!  துரியோதனன் எங்களைக் குறித்து என்ன நினைப்பான்?”


“நீங்கள் அனைவரும் எங்களுடன் வருவதை நான் சிறிதும் ஆதரிக்கவில்லை. அந்த யோசனை எனக்குப் பிடிக்கவில்லை.  உனக்குத் தெரியும் அல்லவா? பானுமதியை நான் என் சகோதரியாக ஸ்வீகரித்திருக்கிறேன் என்பதை அறிவாய் அல்லவா?  நீ மட்டும் துரியோதனனால்  குறித்த நேரத்துக்குள்ளாக ஹஸ்தினாபுரம் சென்ல்லவில்லை எனில் துரியோதனன் அவள் மேல் தன் கோபத்தை எல்லாம் காட்டுவான்.  அவளால் தாங்க இயலாது.”


“ஆஹா, எனக்குத் தெரியும், அவன் அவளை என்னவெல்லாம் செய்வான் என!  அவளைத் தூக்கி எறிவான் அல்லது அவள் இடத்திற்கு வேறு யாரையேனும் கொண்டு வருவான். அதிலும் நாங்கள் பாண்டவர்களோடு சேர்ந்து வருவதை அறிந்தால் நாங்கள் அவர்களுக்கு எங்கள் ஆதரவைக் காட்டுகிறோம் என நினப்பான்.  பாண்டவர்களுடன் அவனுக்கு இருக்கும் சண்டை பெரிதாகவும் ஆகி விடும்.  எங்களையும் வெறுக்க ஆரம்பிப்பான்.  கடவுளே, கடவுளே, இத்தகைய நிலைமையில் நான் என்னதான் செய்வது? ஒன்றும் புரியவில்லை!”


“கவலையே படாதே!  பீமன் இருக்கிறான்,  பார்த்துக் கொள்வான்.”


“என்ன, பீமன் பார்த்துக் கொள்வானா?  கோவிந்தா! இந்தத் தடங்கலை ஏற்படுத்தி எங்களை இங்கேயே நிறுத்தியதே அவன்  தான்.  அவன் செய்த விளையாட்டுத் தனத்தால் ஏற்பட்ட விளைவு தான் இது.  நாங்கள் நதிவழிப் பயணம் செய்வதை நிறுத்த வேண்டி அவன் வேண்டுமென்றே போட்ட திட்டம் தான் இது.”  கோபத்துடன் கத்தினான் சுஷர்மன்.


“நீ பீமனைச் சரியா நடத்தவில்லை.  அவனிடம் நட்போடு பழகு!”


“பீமனிடம் நட்பு? அவனை நான் சரியாக நடத்தவில்லையா?  கோவிந்தா!  அவன் கழுத்தை வெறும் கைகளாலேயே நெரித்துவிடலமா எனத் தோன்றுகிறது எனக்கு. “


“நீ ரொம்ப அவசரப் படுகிறாய் சுஷர்மா! துரியோதனனிடம் நீ தோற்றுப் போய் நிற்பதை பீமன் விரும்ப மாட்டான்.”


“ஹூம், துரியோதனனிடம் தோற்றுப் போயாகிவிட்டது.   பீமன் நாங்கள் உங்களுடன் தரைவழிப் பயணம் செய்ய வேண்டும் என்றே விரும்பினான்.  அவன் விரும்பியது போலவே இப்போது நடக்கிறது. “


“சுஷர்மா, அவன் உங்களை நதிப் பயணம் தான் செய்யச் சொல்கிறான். அதுவும் நாளை நள்ளிரவுக்குள் நீங்கள் கிளம்ப வேண்டும். நீ தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாய்.”


“ஓஹோ, கோவிந்தா, நாளை என்பது இதோ சூரிய உதயம் ஆனதும் வந்துவிடும்.  ஆனால் நாங்கள் போவது எங்கனம்?”


ஏகசக்கரத்து அரசனின் அரசப்படகை வாங்கி வருவதற்காக பீமன் தன் சகோதரன் நகுலனை அங்கே அனுப்பி வைத்துள்ளான்.  இன்று மாலைக்குள் அது இங்கே வந்துவிடும்.”


“என்ன? நிஜமாகவா?  இன்றிரவு நாங்கள் கிளம்புவதற்கு பீமனா இந்த ஏற்பாடுகளைச் செய்தான்?” சுஷர்மாவால் இதை நம்பவே முடியவில்லை.  “ஆம், சுஷர்மா.  உண்மை தான்.  நகுலன், சாத்யகி மற்றும் நாகநாட்டு இளவரசன் மணிமானின் படைத்தளபதியான சிகுரி நாகன் மூவரும் சிறு படகு ஒன்றில் ஏகசக்கரம் நோக்கிப் பயணித்திருக்கின்றனர். “


“ஓஹோ, அப்படியா?” எனக் கேட்ட சுஷர்மாவின் குழப்பம் முற்றிலும் அகலவில்லை.  என்றாலும் கொஞ்சம் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு, மீண்டும் பேச ஆரம்பித்தான்.  இம்முறை அவன் குரலில் கொஞ்சம் பணிவு தெரிந்தது.  “ பின் அவன் ஏன் எங்கள் படகுகளை ஓட்டை போட்டு முழுகச் செய்தான்?” என்று வினவினான். “இளவரசே, பல சமயங்களில் நம் கண்கள் நம்மை ஏமாற்றும்.  நாம் காண்பதில் உண்மை இருப்பது போலத் தோன்றினாலும் அதில் பொய்யும் இருக்கும்.”


“போகட்டும், கோவிந்தா!  உண்மையாகவே இன்றிரவே நான் கிளம்புவதற்கான ஏற்பாடுகளை பீமன் மட்டும் செய்திருந்தான் எனில் நான் என் வாழ்நாள் முழுதும் அவனுக்குக் கடமைப் பட்டிருப்பேன்

1 comment:

ஸ்ரீராம். said...

ம்ம்ம்.... என்னவோ போங்க... பாவம் பீமன்! குழந்தை ஏமாந்துடும்! :)))