ஒருகாலும் நடக்காத ஒன்று ஷாயிபா. அவன் சாதாரணமானவனே அல்ல. மஹரிஷி நாரதரும் கூறி உள்ளார். தற்போது நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் வேத வியாசரும் கூறுகிறார். கண்ணன் சாமானியமானவனே அல்ல. அவன் அதர்மத்தை வேரோடு அழிக்கப்பிறந்தவன். எங்கள் குருதேவர் சாந்தீபனியும் சரி, ஆசாரியர் கர்கரும் சரி கண்ணன் பிறந்ததில் இருந்து அவனின் ஒவ்வொரு வளர்ச்சியையும் பார்த்துக்கொண்டு தானே இருக்கின்றனர்? அவர்களுக்குத் தெரியாதா? உண்மையில் எங்கள் உயிரைக் காப்பது தான் கண்ணன் கைகளில் இருக்கின்றது. “
“ஓ, அப்படியா? அப்படிச் சொல்லு, ஒரு வழியாக உண்மையை ஒத்துக்கொண்டு விட்டாய் அல்லவா? இதை முதலிலேயே கூறி இருக்கலாமே?? கண்ணனுக்கு உதவுவது தான் உன் நோக்கம் என்பதைத் தெளிவாய்ச் சொல்லி இருக்கலாம். “ஷாயிபாவின் குரலில் கடுமை ஏறியது. “ஏன் என்னிடம் பொய் சொன்னாய்? என்னை மணந்து செல்வதற்காகவே வந்திருப்பதாய்க் கூறினாயல்லவா? அதில் உண்மை என்பதே இல்லை அல்லவா?”
“ஓஹோ, ஷாயிபா, சற்றுச் சரியான கோணத்திலே உன் பார்வையைச் செலுத்து. ஏன் இவ்விதம் தவறாகவே நினைக்கிறாய்?? இப்போது ஒரு மாபெரும் சதிச் சுழலிலே சிக்கிக்கொண்டிருக்கிறோம். இதிலிருந்து மீள வேண்டுமெனில் நான் மட்டும் அல்ல, அனைவருமே கண்ணன் சொல்வதைத் தான் கேட்கவேண்டும். நாம் இருவரும் மணந்து கொண்டு குண்டினாபுரம் சென்று அங்கே கண்ணன் இட்ட பணியைச் செவ்வனே செய்து முடிக்கவேண்டும்.” ஷ்வேதகேது கூறினான்.
“ஓ, ஓஹோ, ஆஹா, அப்படி எனில் உன்னுடைய கண்ணனின் சதித்திட்டத்தில் நானும் ஒரு கருவியாகச் செயல்படவேண்டும்.” என்றாள் ஷாயிபா.
ஷ்வேதகேதுவுக்கு இத்தனை நேரம் அடக்கி வைத்த கோபம் பீறிட்டெழுந்தது. “உன்னையே ஒரு முறை கேட்டுக்கொள் ஷாயிபா. நான் சதியிலோ அல்லது பாவச் செயல்களிலோ ஈடுபடுவேனா? உன்னையே ஒரு முறை கேட்டுப் பார்த்துக்கொள். இதோ பார், நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். பிரபாஸ க்ஷேத்திரத்தில் உன்னை எந்த நிமிடம் கண்டேனோ அந்த நிமிடத்திலிருந்து நீ நடக்கும் பாதையின் தூசியைக் கூட வழிபடத் தயாராக இருக்கிறேன். நீ மட்டும் உன் சம்மதத்தைத் தெரிவித்து விட்டால் இந்தக் கணமே கூட உன்னைத் திருமணம் செய்து கொண்டுவிடுவேன். அவ்வளவு நேசிக்கிறேன் உன்னை. மிகவும் போற்றுகிறேன். என் உயிரினும் மேலாகக் கருதுகிறேன். உனக்காக, உன் அன்புக்காக ஏங்குகிறேன். நீ என்னை மணக்க மறுத்து விட்டால்?? ஆம், மறுத்தாயானால்?? உடனே இறந்துவிடமாட்டேன் ஷாயிபா. மரணதேவன் என்னை அழைத்துச் செல்லும் நாளை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். அங்கே மேலோகத்தில் உனக்காக மலர்ப்பாதை அமைத்து உன் வரவை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். யார் கண்டார்கள்? அது தான் நடக்கப் போகிறதோ என்னவோ!” ஷ்வேதகேது பெருமூச்சு விட்டான்.
“நீ எப்படி இறந்து போவாய்?? அதெல்லாம் இறக்க மாட்டாய். அது தான் உன் அருமை நண்பன் நான் உன்னைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என விரும்புகிறானே! அதை நீ மீற மாட்டாயல்லவா?” ஏளனம் பொங்கக் கேட்டாள் ஷாயிபா.
“என்னால் காத்திருக்க இயலாது.” சர்வ நிச்சயமாய்க் கூறினான் ஷ்வேதகேது. “உன் சம்மதம் தெரியும் வரை, நீ மனம் மாறும் வரை காத்திருக்க இயலாது. உன் முடிவை உடனே கூறு. நாம் இருவரும் சேர்ந்து ஆற்ற வேண்டிய பெரிய பணிகள் நமக்காகக் காத்திருக்கின்றன.”
“அப்படி என்ன அரிய பணி?? என் உதவியோடு நீ ஆற்றவேண்டிய சிறந்த பணி என்னவோ?” குரலில் சற்றும் ஏளனம் குறையாமல் கேட்டாள் ஷாயிபா.
“ஜராசந்தனின் சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும். கிருஷ்ணனைக் கொல்லவேண்டும் என்பதற்காகவே சேதி நாட்டு இளவரசன் சிசுபாலனைத் தன் கைக்குள் போட்டுக்கொண்டிருக்கிறான் ஜராசந்தன். அதை முறியடிக்கவேண்டும். ருக்மிணிக்கும் சிசுபாலனுக்கும் நடக்கவிருக்கும் பொம்மைக் கல்யாணத்தை எவ்வகையிலேனும் தடுக்கவேண்டும்.”
“ஓ, திரிவக்கரை ஒரு முறை என்னிடம் இளவரசி ருக்மிணி கண்ணனைக் காதலிப்பதாய்க் கூறினாளே?”
“ஆம், அவள் கண்ணன் மேல் பைத்தியமாக இருக்கிறாள் என்றே கூறலாம். இன்னமும் கண்ணனைத் தவிர வேறு எவரையும் ஏற்க அவள் மனம் மறுக்கிறது. முதலில் இந்த பொய்யான சுயம்வரத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும். அதன் பின்னர் ருக்மிணி கண்ணனை மணப்பதற்கு உன் மூலம் உதவி செய்ய நினைக்கிறேன். நீ அதற்கு ஒத்துழைக்கவேண்டும்.”
“ஆஹா, திட்டம் என்னவோ நன்றாய்த் தான் உள்ளது. ஆனால் இவை எல்லாவற்றையும் நீ செய்து முடிக்கும் முன்னர் ருக்மிணிக்கு வேறு எவரோடும் திருமணம் நடந்துவிட்டால்????”
“எனக்கு ருக்மிணியை நன்கு தெரியும். அவள் மனதை நான் புரிந்து கொண்டு விட்டேன். அவள் மன உறுதி கொண்ட ஒரு பெண். தன் மனதைக் கண்ணன் மேல் திடமாக வைத்திருக்கிறாள். கண்ணனைத் தவிர வேறு எவரையேனும் மணக்கும்படியான சந்தர்ப்பம் நேர்ந்தால், அவள் அதை விடத் தன் உயிரை விட்டுவிடுவாள் என எதிர்பார்க்கலாம். இது சர்வ நிச்சயம். அவள் அப்படிப்பட்ட பெண்.”
“ஆஹா, எல்லாப் பெண்களும் அப்படித் தான் சொல்லிக்கொண்டிருப்பார்கள். ஆனால் திருமணம் செய்து கொள்வது என்பதோ தாயும், தகப்பனும் சுட்டும் ஒருவனைத் தான்.”
“நீ அப்படி என்னைத் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று சொல்லிவிடாதே ஷாயிபா. “ஷ்வேதகேது கொஞ்சம் கவலையுடனேயே கூறினான். “ஷாயிபா, பழைய விஷயங்களை மறந்துவிடு. நாம் இருவருமாகப் புதியதொரு எதிர்காலத்தை ஆரம்பிப்போம். நான் உன்னை இன்னமும் விரும்புகிறேன். மனதார விரும்புகிறேன். என் கண்களில் நீ இல்லாத எதிர்காலத்தை நான் காண விரும்பவில்லை.”
“கிருஷ்ணன் ருக்மிணியை மணந்து கொள்ளச் சம்மதித்துவிட்டானா?”ஷாயிபா கேட்டாள். திடீரென ஷாயிபாவிற்கு இந்த விஷயத்தைத் தெரிந்து கொள்ளும் ஆவல் அதிகரித்தது. “எனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டான் ஷ்வேதகேது. “நீ தான் சொல்லேன்.” என்றான்.
“இதோ பார் ஷ்வேதகேது. நான் இந்தக் கண்ணனை வெறுக்கிறேன். அடியோடு வெறுக்கிறேன். அவனுக்காக எந்த உதவியையும் நான் செய்யத் தயாராக இல்லை. செய்யவும் மாட்டேன். உதவியா உதவி?? என் கண் முன்னால் அந்தக் கண்ணன் சாகவே நான் விரும்புகிறேன். அதே சமயம் நான் உன்னை மணக்கவும் விரும்பவில்லை. என்னையும் என் பெரியப்பனையும் ஏமாற்றி நயவஞ்சகமாக என் பெரியப்பனைக் கொன்று, நாட்டையும் பறித்தாய் நீ. அந்தக் கண்ணனுக்கு அதற்கான உதவியைச் செய்தாய் நீ. அதோடு உன்னை மணந்து கொண்டு அந்தக்கண்ணனுக்கு உதவி செய்யும் ஒரு முக்கியக் கருவியாக நான் விரும்பவில்லை. நீ போகலாம்.”
“கண்மூடித்தனமான கோபத்தில் இருக்கிறாய் ஷாயிபா. அந்தக் கோபத்திலேயே பேசவும் செய்கிறாய். நான் இன்னும் சில நாட்கள் இங்கே தான் தங்கப் போகிறேன். உன்னிடமிருந்து இல்லை என்ற பதிலை நான் எதிர்பார்க்கவே இல்லை. வலுக்கட்டாயமாகவேனும் உன்னைத் தூக்கிக்கொண்டு குண்டினாபுரம் செல்லவே நான் விரும்புகிறேன். உன்னை விட மாட்டேன்.”
“நீ முதலில் இங்கிருந்து செல்!’ சீறினாள் ஷாயிபா.
“இப்போது நான் போனாலும் தினமும் உன்னிடம் தான் வருவேன். நீ சரி என்று சொல்லும் வரை வருவேன்.” என்றான் ஷ்வேதகேது.
Thursday, April 14, 2011
Sunday, April 10, 2011
ஷாயிபாவின் கோபமும், ஷ்வேதகேதுவின் ஆவலும்! கண்ணன் வருவான் 2-ம் பாகம்!
ஷாயிபாவின் மனதில் எழுந்த கோபத்தை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. சற்று நேரம் அப்படியே நின்றார்கள். அங்கே மெளனம் நீடித்தது. இருவருமே எதுவும் பேசவில்லை. அவர்களோடு சேர்ந்து காலமும் நின்றுவிட்டதோ எனும்படி எங்கும் ஒரே அமைதி. அந்தக் கல்லால் ஆன சிங்காதனத்தின் எதிரே தானும் ஒரு கற்சிலை போல் நின்றிருந்தாள் ஷாயிபா. முதலில் தன்னைச் சமாளித்துக்கொண்டு ஷ்வேதகேதுவே பேச ஆரம்பித்தான். “ஷாயிபா, கண்ணன் உன்னிடம் சொல்லி இருப்பானே??என்னால் உன்னை விட்டுவிட்டு வாழ முடியாது. நீ இல்லாமல் எனக்கு வாழ்க்கையே சூனியமாய்த் தெரிகிறது. இரவும், பகலும் நான் உன்னை நினைந்து ஏங்குகிறேன். உன்னோடுசேர்ந்து வாழப்போகும் வாழ்க்கைக்கான கனவுகளில் மூழ்கி விடுகிறேன். நான் இப்போது இங்கே வந்ததே உன்னை என் மனைவியாக்கிக்கொண்டு குண்டினாபுரம் அழைத்துச் சென்று அங்கே அமைதியானதொரு வாழ்க்கையைக் கழிக்கவேண்டும் என்று தான்.” ஷ்வேதகேது ஒரு வழியாகச் சொல்லி முடித்தான்.
“பொய்யனே!” வெடித்தாள் ஷாயிபா. அடக்க முடியாத கோபம் அவள் குரலில் தெரிந்தது. நீ குண்டினாபுரத்திலிருந்து இங்கே வந்ததன் உண்மையான காரணம் எனக்குத் தெரியாதென நினைத்தாயா?? உன் அருமைச் சிநேகிதனும் உன் மாணவன் எனப் பெருமை அடித்துக்கொள்ளும் கிருஷ்ணனுக்காகச் செய்தி கொண்டு வந்திருக்கிறாய். பீஷ்மகன் தன் ஒரே மகள் ருக்மிணிக்குத் திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுக்கச் சுயம்வரம் வைத்திருக்கும் தகவலை நேரில் தெரிவிக்க வந்துள்ளாய். ஏனெனில் பீஷ்மகனின் அதிகாரபூர்வ அழைப்பு இங்கே வரவில்லை என்பது எனக்குத் தெரியும்.” சற்றே நிறுத்தினாள் ஷாயிபா. கோபத்திலும், ஆத்திரத்திலும் அவள் உடலே துடித்துக்கொண்டிருந்தது. ஷ்வேதகேது அதை மறுப்பான் என எண்ணினால் ஷாயிபா ஏமாற்றமே அடைந்தாள்.
“உண்மைதான் ஷாயிபா. உனக்கு எல்லா விஷயங்களும் தெரிந்திருக்கின்றதே. எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை நான் கொண்டு வந்திருக்கிறேன் என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறாய் அல்லவா?? அங்கே ஒரு பெரிய சதியே நடக்கிறது. அந்தச் சதியின் மூளை ஜராசந்தன். எவ்வாறேனும் யாதவர்களையும், கண்ணனையும் அடியோடு அழிக்கத் துடிக்கிறான் . கண்ணனை எவ்வாறேனும் கொல்வது ஒன்றே அவன் குறிக்கோள். இந்நிலையில்………..” ஆரம்பித்த ஷ்வேதகேதுவை இடைவெட்டினாள் ஷாயிபா. “அப்படிக் கண்ணன் கொல்லப் பட்டால் அது சரியானதே. அவன் செய்த அனைத்துத் தீங்குகளுக்கும் சரியான பதிலாகும். நன்றாய்ச் சாகட்டும்.” ஆத்திரத்துடன் மொழிந்த ஷாயிபா, ஷ்வேதகேதுவைப் பார்த்து, "அதுசரி, என்ன உனக்கு இந்தக் கண்ணனிடம் மட்டும் இவ்வளவு பாசமும், கருணையும் பொங்குகிறது??? இவனிடம் எதைக் கண்டாய்?? இவனுக்காக நீ என்னையும் ஏமாற்றினாய். என் பெரியப்பாவையும் ஏமாற்றினாய். இப்போது நீ ஊழியம் செய்யும் அரசன் பீஷ்மகனையும் ஏமாற்றப்போகிறாயா? உன்னுடைய துரோக சிந்தனைகளுக்கு அளவே இல்லையா? “ ஷாயிபா கோபத்துடன் கேட்டாள்.
“ஷாயிபா, ஷாயிபா, நீ எங்களைப் புரிந்து கொண்டது இவ்வளவு தானா?? நீ ஏன் எப்போதும் கரவீரபுரத்தின் நடைமுறைகளையும், அதன் அளவுகோலாலேயேயும் எங்களை எடை போடுகிறாய்?? இங்கே….” அதற்குள்ளாக ஷாயிபா கடுகெனப் பொரிந்தாள். “எங்கள் அளவுகோல் நீங்கள் வைத்திருப்பதை விட மிக மிக மேலான ஒன்று. நாணயமான ஒன்று.” என்றாள். “இருக்கலாம், இருக்கலாம். ஆனால்…… ஆனால்…….. இங்கே இங்கே ஆரியர்களின் பழக்க வழக்கங்கள் வேறு. முற்றிலும் வேறான ஒன்று. கரவீரபுரத்தின் வழக்கங்களை விட முற்றிலும் மாறுபட்டது. இங்கே உள்ள அரச தர்மம் நீடித்து நிலைத்துத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் ஒன்று. எவராலும் அதை மீற இயலாது. இதைக் கேள் ஷாயிபா, எங்கள் முன்னோர்கள் இறந்துவிட்டார்கள் தான். அவர்கள் நிலைத்து இருக்கவில்லை. ஆனால் அவர்கள் நிலைநாட்டிய தர்ம்ம் செத்துவிடவில்லை. நிலைத்து நிற்கின்றது. அடுத்தடுத்துத் தொடர்ந்து வரும் அனைத்து மன்னர்களும் இதைத் தொடர்ந்து நிலை நாட்டுகின்றனர். தர்மத்தின் எல்லையைக் கடக்க எவரும் முயலவில்லை. முயலவும் மாட்டார்கள்.” என்றான் ஷ்வேதகேது.
“எனில் என் பெரியப்பாவிடம் அந்த தர்மமே இல்லையா? ஜராசந்தனிடம் இல்லையா?” ஷாயிபா கேட்டாள். “நீ கேட்பது சரியே. உனக்கு விளக்கவேண்டியதும் என் கடமை. இந்த ஜராசந்தன் பல வருடங்களாகச் சிற்றரசர்களைக் கொன்று அவர்களின் ராஜ்ஜியத்தைத் தன் ராஜ்யத்தோடு இணைத்துக்கொண்டுவிடுகிறான். அவர்களின் குடும்பப்பெண்களை மானபங்கம் செய்து தன் அரண்மனையில் பணிப்பெண்களுக்கும் கீழாக நடத்துகிறான். வீரர்களையும் தீரச் செயல்கள் செய்பவர்களையும் அவனுக்குப்பிடிக்கவில்லை. அவர்களை எவ்விதமேனும் அடிமைப் படுத்தி விலங்கிட்டுச் சிறையில் தள்ளுகிறான். பல வித்யாஸ்ரமங்களையும், குருகுலங்களையும் அடியோடு அழித்து ஆசாரியர்களை அவமானம் செய்து நாட்டை விட்டே துரத்தினான். இப்போது…. இப்போது….. இவை அனைத்துக்கும் ஒரு முடிவு கண்ணனால் ஏற்படப்போகிறது.” ஷ்வேதகேது நிறுத்தினான்.
“ஓஓஓஓஓ, இந்த கோவிந்தன் என்பவன், மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த இடைச்சிறுவன்….. அவன் தான் உங்களைக் காக்க வந்தவனா??? என் பெரியப்பனைக் கொன்றதோடு அல்லாமல், தன் சொந்த மாமனையும் தன் கரங்களாலேயே கொன்ற பாதகன்!” ஏளனம் பொங்கக் கேட்டாள் ஷாயிபா.
“ஆஹா, உனக்கு இப்போது எதுவும் புரியாது ஷாயிபா. கரவீரபுரத்தின் நீரின் மகிமை இன்னமும் உன் உடலில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அது முழுதும் அகன்றால் தான் நீ உண்மையை உள்ளது உள்ளபடி பார்க்க ஆரம்பிப்பாய். “ ஷ்வேதகேது தொடர்ந்து பேசினான். “கடவுளரின் சக்தியும் சரி, மனிதர்களின் மகிழ்ச்சியும் சந்தோஷமும் சரி அனைத்தும் இந்த தர்மத்தாலேயே பிணைக்கப் பட்டிருக்கிறது. இது ஒன்றும் இங்கு ஆளும் அரசர்களின் தனிச் சொத்தும் அல்ல. பூர்வீகமாய் வந்த சொத்தும் அல்ல. பார்க்கப்போனால் தர்மமே இவர்களைத் தங்கள் கருவிகளாய் வைத்துச் செயல்பட்டுக்கொள்கிறது என்றும் கூறலாம். உன் பெரியப்பனும் சரி, கம்சனும் சரி, தர்மத்தைக் கடைப்பிடிக்க வில்லை. தர்மத்தின் வழி ராஜ்யம் ஆளவில்லை. அவரவர் விருப்பத்திற்கிணங்க இருவரும் ஆட்சி செய்தனர். அவர்களின் தவறுகளையும், குற்றங்களையும் சுட்டிக்காட்டும் நபர்கள் எவ்வளவு பெரியவர் ஆனாலும், அவர்களைத் தங்கள் பாதையிலிருந்து அகற்றினர். உன்னுடைய பெரியப்பாவும் அதையே செய்தார். இப்போது ஜராசந்தனும் அதையே செய்து வருகிறான்.”ஷ்வேதகேதுவின் வருத்தம் அவன் குரலில் தெரிந்தது. மேலும் அவன், “தர்மம் கடைப்பிடிக்கப்படவேண்டும். தர்மம் நிலைநாட்டப் படவேண்டும். “ என்றான்.
“ஓஹோ, அப்படி என்றால் நீ இப்போது உன் சிநேகிதன் தர்மத்தை நிலைநாட்டவேண்டி அவனுக்கு உதவி செய்து வருகிறாயா?? ஜராசந்தனை உன் சிநேகிதன் அழிப்பதன் மூலம் தர்மம் நிலை நாட்டப்படுமா?” ஷாயிபாவின் ஏளனம் அகலவே இல்லை.
“இல்லை ஷாயிபா, அங்கேதான் நீ தவறான புரிதலில் இருக்கிறாய். கண்ணன் ஜராசந்தனை தர்மத்தின் பாதையில் திருப்பவே முயல்கிறான்.” என்றான்.
“ஆஹா, ஆனால் அதற்கு உன் நண்பன் உயிரோடு இருக்கவேண்டுமே! ஒருவேளை அவனுக்குக் கூடிய சீக்கிரம் முடிவு வந்துவிட்டால்?” எகத்தாளம் ததும்பி நின்றது ஷாயிபாவின் குரலில்
“பொய்யனே!” வெடித்தாள் ஷாயிபா. அடக்க முடியாத கோபம் அவள் குரலில் தெரிந்தது. நீ குண்டினாபுரத்திலிருந்து இங்கே வந்ததன் உண்மையான காரணம் எனக்குத் தெரியாதென நினைத்தாயா?? உன் அருமைச் சிநேகிதனும் உன் மாணவன் எனப் பெருமை அடித்துக்கொள்ளும் கிருஷ்ணனுக்காகச் செய்தி கொண்டு வந்திருக்கிறாய். பீஷ்மகன் தன் ஒரே மகள் ருக்மிணிக்குத் திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுக்கச் சுயம்வரம் வைத்திருக்கும் தகவலை நேரில் தெரிவிக்க வந்துள்ளாய். ஏனெனில் பீஷ்மகனின் அதிகாரபூர்வ அழைப்பு இங்கே வரவில்லை என்பது எனக்குத் தெரியும்.” சற்றே நிறுத்தினாள் ஷாயிபா. கோபத்திலும், ஆத்திரத்திலும் அவள் உடலே துடித்துக்கொண்டிருந்தது. ஷ்வேதகேது அதை மறுப்பான் என எண்ணினால் ஷாயிபா ஏமாற்றமே அடைந்தாள்.
“உண்மைதான் ஷாயிபா. உனக்கு எல்லா விஷயங்களும் தெரிந்திருக்கின்றதே. எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை நான் கொண்டு வந்திருக்கிறேன் என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறாய் அல்லவா?? அங்கே ஒரு பெரிய சதியே நடக்கிறது. அந்தச் சதியின் மூளை ஜராசந்தன். எவ்வாறேனும் யாதவர்களையும், கண்ணனையும் அடியோடு அழிக்கத் துடிக்கிறான் . கண்ணனை எவ்வாறேனும் கொல்வது ஒன்றே அவன் குறிக்கோள். இந்நிலையில்………..” ஆரம்பித்த ஷ்வேதகேதுவை இடைவெட்டினாள் ஷாயிபா. “அப்படிக் கண்ணன் கொல்லப் பட்டால் அது சரியானதே. அவன் செய்த அனைத்துத் தீங்குகளுக்கும் சரியான பதிலாகும். நன்றாய்ச் சாகட்டும்.” ஆத்திரத்துடன் மொழிந்த ஷாயிபா, ஷ்வேதகேதுவைப் பார்த்து, "அதுசரி, என்ன உனக்கு இந்தக் கண்ணனிடம் மட்டும் இவ்வளவு பாசமும், கருணையும் பொங்குகிறது??? இவனிடம் எதைக் கண்டாய்?? இவனுக்காக நீ என்னையும் ஏமாற்றினாய். என் பெரியப்பாவையும் ஏமாற்றினாய். இப்போது நீ ஊழியம் செய்யும் அரசன் பீஷ்மகனையும் ஏமாற்றப்போகிறாயா? உன்னுடைய துரோக சிந்தனைகளுக்கு அளவே இல்லையா? “ ஷாயிபா கோபத்துடன் கேட்டாள்.
“ஷாயிபா, ஷாயிபா, நீ எங்களைப் புரிந்து கொண்டது இவ்வளவு தானா?? நீ ஏன் எப்போதும் கரவீரபுரத்தின் நடைமுறைகளையும், அதன் அளவுகோலாலேயேயும் எங்களை எடை போடுகிறாய்?? இங்கே….” அதற்குள்ளாக ஷாயிபா கடுகெனப் பொரிந்தாள். “எங்கள் அளவுகோல் நீங்கள் வைத்திருப்பதை விட மிக மிக மேலான ஒன்று. நாணயமான ஒன்று.” என்றாள். “இருக்கலாம், இருக்கலாம். ஆனால்…… ஆனால்…….. இங்கே இங்கே ஆரியர்களின் பழக்க வழக்கங்கள் வேறு. முற்றிலும் வேறான ஒன்று. கரவீரபுரத்தின் வழக்கங்களை விட முற்றிலும் மாறுபட்டது. இங்கே உள்ள அரச தர்மம் நீடித்து நிலைத்துத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் ஒன்று. எவராலும் அதை மீற இயலாது. இதைக் கேள் ஷாயிபா, எங்கள் முன்னோர்கள் இறந்துவிட்டார்கள் தான். அவர்கள் நிலைத்து இருக்கவில்லை. ஆனால் அவர்கள் நிலைநாட்டிய தர்ம்ம் செத்துவிடவில்லை. நிலைத்து நிற்கின்றது. அடுத்தடுத்துத் தொடர்ந்து வரும் அனைத்து மன்னர்களும் இதைத் தொடர்ந்து நிலை நாட்டுகின்றனர். தர்மத்தின் எல்லையைக் கடக்க எவரும் முயலவில்லை. முயலவும் மாட்டார்கள்.” என்றான் ஷ்வேதகேது.
“எனில் என் பெரியப்பாவிடம் அந்த தர்மமே இல்லையா? ஜராசந்தனிடம் இல்லையா?” ஷாயிபா கேட்டாள். “நீ கேட்பது சரியே. உனக்கு விளக்கவேண்டியதும் என் கடமை. இந்த ஜராசந்தன் பல வருடங்களாகச் சிற்றரசர்களைக் கொன்று அவர்களின் ராஜ்ஜியத்தைத் தன் ராஜ்யத்தோடு இணைத்துக்கொண்டுவிடுகிறான். அவர்களின் குடும்பப்பெண்களை மானபங்கம் செய்து தன் அரண்மனையில் பணிப்பெண்களுக்கும் கீழாக நடத்துகிறான். வீரர்களையும் தீரச் செயல்கள் செய்பவர்களையும் அவனுக்குப்பிடிக்கவில்லை. அவர்களை எவ்விதமேனும் அடிமைப் படுத்தி விலங்கிட்டுச் சிறையில் தள்ளுகிறான். பல வித்யாஸ்ரமங்களையும், குருகுலங்களையும் அடியோடு அழித்து ஆசாரியர்களை அவமானம் செய்து நாட்டை விட்டே துரத்தினான். இப்போது…. இப்போது….. இவை அனைத்துக்கும் ஒரு முடிவு கண்ணனால் ஏற்படப்போகிறது.” ஷ்வேதகேது நிறுத்தினான்.
“ஓஓஓஓஓ, இந்த கோவிந்தன் என்பவன், மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த இடைச்சிறுவன்….. அவன் தான் உங்களைக் காக்க வந்தவனா??? என் பெரியப்பனைக் கொன்றதோடு அல்லாமல், தன் சொந்த மாமனையும் தன் கரங்களாலேயே கொன்ற பாதகன்!” ஏளனம் பொங்கக் கேட்டாள் ஷாயிபா.
“ஆஹா, உனக்கு இப்போது எதுவும் புரியாது ஷாயிபா. கரவீரபுரத்தின் நீரின் மகிமை இன்னமும் உன் உடலில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அது முழுதும் அகன்றால் தான் நீ உண்மையை உள்ளது உள்ளபடி பார்க்க ஆரம்பிப்பாய். “ ஷ்வேதகேது தொடர்ந்து பேசினான். “கடவுளரின் சக்தியும் சரி, மனிதர்களின் மகிழ்ச்சியும் சந்தோஷமும் சரி அனைத்தும் இந்த தர்மத்தாலேயே பிணைக்கப் பட்டிருக்கிறது. இது ஒன்றும் இங்கு ஆளும் அரசர்களின் தனிச் சொத்தும் அல்ல. பூர்வீகமாய் வந்த சொத்தும் அல்ல. பார்க்கப்போனால் தர்மமே இவர்களைத் தங்கள் கருவிகளாய் வைத்துச் செயல்பட்டுக்கொள்கிறது என்றும் கூறலாம். உன் பெரியப்பனும் சரி, கம்சனும் சரி, தர்மத்தைக் கடைப்பிடிக்க வில்லை. தர்மத்தின் வழி ராஜ்யம் ஆளவில்லை. அவரவர் விருப்பத்திற்கிணங்க இருவரும் ஆட்சி செய்தனர். அவர்களின் தவறுகளையும், குற்றங்களையும் சுட்டிக்காட்டும் நபர்கள் எவ்வளவு பெரியவர் ஆனாலும், அவர்களைத் தங்கள் பாதையிலிருந்து அகற்றினர். உன்னுடைய பெரியப்பாவும் அதையே செய்தார். இப்போது ஜராசந்தனும் அதையே செய்து வருகிறான்.”ஷ்வேதகேதுவின் வருத்தம் அவன் குரலில் தெரிந்தது. மேலும் அவன், “தர்மம் கடைப்பிடிக்கப்படவேண்டும். தர்மம் நிலைநாட்டப் படவேண்டும். “ என்றான்.
“ஓஹோ, அப்படி என்றால் நீ இப்போது உன் சிநேகிதன் தர்மத்தை நிலைநாட்டவேண்டி அவனுக்கு உதவி செய்து வருகிறாயா?? ஜராசந்தனை உன் சிநேகிதன் அழிப்பதன் மூலம் தர்மம் நிலை நாட்டப்படுமா?” ஷாயிபாவின் ஏளனம் அகலவே இல்லை.
“இல்லை ஷாயிபா, அங்கேதான் நீ தவறான புரிதலில் இருக்கிறாய். கண்ணன் ஜராசந்தனை தர்மத்தின் பாதையில் திருப்பவே முயல்கிறான்.” என்றான்.
“ஆஹா, ஆனால் அதற்கு உன் நண்பன் உயிரோடு இருக்கவேண்டுமே! ஒருவேளை அவனுக்குக் கூடிய சீக்கிரம் முடிவு வந்துவிட்டால்?” எகத்தாளம் ததும்பி நின்றது ஷாயிபாவின் குரலில்
Thursday, April 7, 2011
ஷாயிபாவிற்குச் சம்மதமா??? கண்ணன் வருவான் 2-ம் பாகம்!
ஷாயிபாவிற்கு வந்த கோபத்தில் கையில் இருந்த அந்தப் பெரிய தாம்பாளத்தை அப்படியே கண்ணன் தலையில் கவிழ்த்துவிடலாமா என நினைத்தாள். ஆனால் கண்ணனோ அவள் கோபத்தை லக்ஷியமே செய்யாமல் ஷ்வேதகேதுவைப் பார்த்துக்கொண்டிருந்தான். ஷ்வேதகேது தனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியையும், அதன் விளைவால் எழுந்த நாணத்தையும் மறைக்கப்பெரும் முயற்சி எடுத்துக்கொண்டிருந்தான். அம்முயற்சியில் அவனுக்குக் கிட்டிய தோல்வியைச் சிவந்த அவன் முகமும் ஒளிரும் கண்களும் காட்டிக்கொடுத்தன. ஷாயிபாவுக்கு தன்னைக் கண்ட நாள் முதலாகத் தன்னிடம் பேசும்போதெல்லாம் இதே மாதிரி வெட்கமும், குழப்பமும், மகிழ்ச்சியும் கலந்த கலவையானதொரு உணர்வில் ஷ்வேதகேது பேசுவான் என்பது நினைவில் மோதியது. எனில்…… எனில்…….. எனில்……
ஷ்வேதகேது அவளை மறக்கவில்லை. இன்னமும் அவன் அவளைத் தான் நினைத்துக்கொண்டிருக்கிறான். இத்தனைக்குப் பிறகும்??? அதுவும் என் பெரியப்பா ஸ்ரீகாலவனுக்குச் செய்த துரோகத்துக்குப் பின்னரும்?? அதன் மூலம் என்னையும் ஏமாற்றினானே! அதன் பின்னருமா என்னை இன்னும் விரும்புகிறான்???? ஷாயிபாவின் கைகள் நடுங்க, பெரும் முயற்சி எடுத்துத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவள் அங்கிருந்து மற்றவர்களுக்குப் பரிமாற வேண்டி நகர்ந்தாள். ஆனாலும் அவள் இதயம் துடிக்கும் துடிப்பு ஓயவே இல்லை. அந்தச் சப்தம் அங்கிருக்கும் அனைவருக்கும் கேட்டுவிடுமோ என அவள் அஞ்சினாள். கீழே விழுந்துவிடாமல் இருக்கப்பெரும் பிரயத்தனம் செய்தாள்.
உணவு முடிந்தது. ஆடவர் அனைவரும் சற்றே ஓய்வு எடுக்க ஓய்வறைக்குச் செல்லப் பெண்கள் சாப்பிட அமர்ந்தனர். ஷாயிபாவால் எதுவுமே உண்ண முடியவில்லை. பரபரப்பிலும் அடுத்து நடக்கப் போவதை எண்ணியும் அவள் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாதவளாயிருந்தாள். உணவு உண்டதும் தன் அறைக்குச் சென்ற ஷாயிபாவால் சற்று நேரம் கூடப் படுக்க முடியவில்லை. கண்களை மூடிச் சிறிது நேரம் தூங்கலாம் என முயன்றால் குறும்பு கூத்தாடும் கண்ணனின் கண்களே எதிரே வந்தன. வேறு ஏதேனும் வேலை செய்யலாம் எனில் வெட்கமும், ஆவலும், ஆசையும் ததும்பிய கோலத்தில் காணப்பட்ட ஷ்வேதகேதுவின் முகம் மட்டுமே தெரிந்தது. செய்வதறியாமல் திகைத்த ஷாயிபாவிற்கு இவர்கள் இருவரும் அன்று அங்கே வரப் போவதை எண்ணியே தலைவலியே வந்துவிட்டது. இனிமேல் முடியாது என நினைத்த வண்ணம் அவர்கள் வரவை எண்ணிக் காத்திருந்தாள் ஷாயிபா.
சற்று நேரத்தில் அறைக்கு வெளியே இருந்த நடைபாதையில் காலடிச் சப்தம் கேட்க ஷாயிபா உற்றுக் கவனித்தாள். சப்தம் அவள் அறைக்கே வந்தது. கதவைத் திறந்தது திரிவக்கரை. சட்டென ஏமாற்றம் ஏற்பட்டாலும் அடுத்த கணம் மீண்டும் ஷாயிபாவின் இதயம் படபடவெனத் துடிக்க ஆரம்பித்தது. தன்னைக் கட்டுப்படுத்த இயலவில்லை அவளுக்கு. திரிவக்கரையும் நேரத்தை வீணாக்காமல் கண்ணன் அவளை அழைத்துவரச் சொன்னதாய்க் கூறவே, ஒரு கணம் ஏன் நேரில் வந்து அழைத்தால் என்ன? ஆளனுப்பி இருக்கிறானே என்று கண்ணன் மேல் கோபம் வந்தது ஷாயிபாவுக்கு. அடுத்த கணம் அவள் தன்னைச் சமாளித்துக்கொண்டு ஆடைகளையும், நகைகளையும் மாற்றிக்கொண்டு திரிவக்கரையுடன் கிளம்பினாள். வெளியே அரண்மனை உத்தியானவனத்தில் ஒரு மாமரத்தின் அடியில் கிடந்த ஒரு கல்லால் ஆன ஆசனத்தின் மீது அமர்ந்திருந்தான் கண்ணன். அருகே ஷ்வேதகேது.
அந்த மாமரத்தடி கண்ணனுக்கு மிகவும் பிடித்தமானது என்றும் கண்ணன் தன் பொழுதை எல்லாம் இங்கேதான் கழிப்பான் என்றும் அவள் அறிந்திருக்கிறாள். நல்ல மழைக்காலத்திலும், கடும் பனிக்காலத்திலும் தவிர மற்ற நேரங்களில் திருமணம் ஆகாத இளைஞர்கள் இம்மாதிரி வெட்டவெளியிலேயே தங்கள் இரவுகளையும் கழித்தனர். அங்கேயே தூங்கவும் செய்தனர். அப்படிக் கண்ணன் தூங்கும் இடம் இதுதான் எனவும் எப்போதும் கூடவே உத்தவனும் இருப்பான் என்பதையும் ஷாயிபா ஏற்கெனவே அறிந்திருந்தாள். இந்த இடத்திற்குத் தான் நடு இரவில் வந்து கண்ணனைக் கொல்லவும் உத்தேசித்திருந்தாள். அவள் சிந்தனையைத் தடை செய்வது போல் கண்ணன் குரல் கேட்டது.
“இதோ பார் சகோதரி! உன்னுடைய பொக்கிஷத்தை உன்னிடம் ஒப்படைக்கிறேன். இவரைச் சாதாரணமானவராக எண்ணாதே. எனக்கு குருவாகவும், ஆயுதப் பயிற்சி கற்றுக் கொடுக்கும் ஆசானாகவும் இருந்தவர். இவர் அறியாத அஸ்திர, சஸ்திர வித்தைகளே இல்லை. இப்போது குண்டினாபுரத்தில் ஒரு ஆசிரமம் அமைக்க மன்னனிடம் அநுமதி பெற்றிருக்கிறார். அங்கிருக்கும் இளம் போஜர்களுக்கு ஆயுதப் பயிற்சியும் சாஸ்திரப் பயிற்சியும், மற்றும் எல்லா வித்தைகளையும் கற்பிக்கப்போகிறார். தற்சமயம் உன்னுடைய பொறுப்பை நான் ஏற்றிருப்பதால் உன்னை மணக்க என் அநுமதி வேண்டி வந்துள்ளார். இவருக்கு உடனடியாக மனைவிதேவையாம். அதுவும் உன்னைத் தான் மணப்பாராம். வேறு எவரையும் மணக்க மாட்டாராம். சற்றும் பொறுக்க இயலாது என்கிறார்.”
கண்ணனின் குரலில் இனம் காண இயலாததொரு மகிழ்வு. இவற்றைக் கூறிய கண்ணன் கலகலவெனச் சிரித்தான். ஷாயிபாவுக்கு ஆத்திரம் பொங்கியது. இப்போது தன் திருமணத்தைப் பற்றி யோசிக்கும் நிலையில் அவள் இல்லை. அதுவும் இந்தப்பாதகன், துரோகி, ஷ்வேதகேதுவின் முன்னிலையில் அதைக் குறித்து ஆலோசிக்கவும் பேசவும் அவள் சற்றும் தயாராக இல்லை. ஆனால் கண்ணன் கண்களில் இவை எதுவுமே படவில்லையா? அவன் மேலும் சொன்னான்:”இப்போது திரிவக்கரைக்கும் எனக்கும் வேறு வேலைகள் இருக்கின்றன. ஆகையால் உங்கள் இருவரையும் இங்கே விட்டுவிட்டு நாங்கள் எங்கள் வேலைகளைப் பார்க்கப்போகிறோம்.” கூறிய வண்ணம் கண்ணன் ஷ்வேதகேதுவைப் பார்த்து, “ஆசானே, உமக்கு ஏதேனும் தொந்தரை எனத் தோன்றினால் ஷாயிபாவுடன் அவளையும் கூட்டிக்கொண்டு நீர் இங்கிருந்து தப்பிச் செல்ல்லாம். ஹாஹாஹா, ஆனால் நான் பின் தொடர்ந்து வந்து உம்மைக் குரல் வளையை நெரித்துவிட்டு இவளைத் திரும்பக் கொண்டு வருவது என்றெல்லாம் செய்ய மாட்டேன். கலங்காதீர். இனி உம் பாடு, இவள் பாடு. வா திரிவக்கரை. நாம் செல்ல்லாம்.” கூறியவண்ணம் சிரித்துக்கொண்டே கண்ணன் திரிவக்கரையை அழைத்துக்கொண்டு அவ்விடம் விட்டு அகன்றான்.
ஷ்வேதகேது அவளை மறக்கவில்லை. இன்னமும் அவன் அவளைத் தான் நினைத்துக்கொண்டிருக்கிறான். இத்தனைக்குப் பிறகும்??? அதுவும் என் பெரியப்பா ஸ்ரீகாலவனுக்குச் செய்த துரோகத்துக்குப் பின்னரும்?? அதன் மூலம் என்னையும் ஏமாற்றினானே! அதன் பின்னருமா என்னை இன்னும் விரும்புகிறான்???? ஷாயிபாவின் கைகள் நடுங்க, பெரும் முயற்சி எடுத்துத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவள் அங்கிருந்து மற்றவர்களுக்குப் பரிமாற வேண்டி நகர்ந்தாள். ஆனாலும் அவள் இதயம் துடிக்கும் துடிப்பு ஓயவே இல்லை. அந்தச் சப்தம் அங்கிருக்கும் அனைவருக்கும் கேட்டுவிடுமோ என அவள் அஞ்சினாள். கீழே விழுந்துவிடாமல் இருக்கப்பெரும் பிரயத்தனம் செய்தாள்.
உணவு முடிந்தது. ஆடவர் அனைவரும் சற்றே ஓய்வு எடுக்க ஓய்வறைக்குச் செல்லப் பெண்கள் சாப்பிட அமர்ந்தனர். ஷாயிபாவால் எதுவுமே உண்ண முடியவில்லை. பரபரப்பிலும் அடுத்து நடக்கப் போவதை எண்ணியும் அவள் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாதவளாயிருந்தாள். உணவு உண்டதும் தன் அறைக்குச் சென்ற ஷாயிபாவால் சற்று நேரம் கூடப் படுக்க முடியவில்லை. கண்களை மூடிச் சிறிது நேரம் தூங்கலாம் என முயன்றால் குறும்பு கூத்தாடும் கண்ணனின் கண்களே எதிரே வந்தன. வேறு ஏதேனும் வேலை செய்யலாம் எனில் வெட்கமும், ஆவலும், ஆசையும் ததும்பிய கோலத்தில் காணப்பட்ட ஷ்வேதகேதுவின் முகம் மட்டுமே தெரிந்தது. செய்வதறியாமல் திகைத்த ஷாயிபாவிற்கு இவர்கள் இருவரும் அன்று அங்கே வரப் போவதை எண்ணியே தலைவலியே வந்துவிட்டது. இனிமேல் முடியாது என நினைத்த வண்ணம் அவர்கள் வரவை எண்ணிக் காத்திருந்தாள் ஷாயிபா.
சற்று நேரத்தில் அறைக்கு வெளியே இருந்த நடைபாதையில் காலடிச் சப்தம் கேட்க ஷாயிபா உற்றுக் கவனித்தாள். சப்தம் அவள் அறைக்கே வந்தது. கதவைத் திறந்தது திரிவக்கரை. சட்டென ஏமாற்றம் ஏற்பட்டாலும் அடுத்த கணம் மீண்டும் ஷாயிபாவின் இதயம் படபடவெனத் துடிக்க ஆரம்பித்தது. தன்னைக் கட்டுப்படுத்த இயலவில்லை அவளுக்கு. திரிவக்கரையும் நேரத்தை வீணாக்காமல் கண்ணன் அவளை அழைத்துவரச் சொன்னதாய்க் கூறவே, ஒரு கணம் ஏன் நேரில் வந்து அழைத்தால் என்ன? ஆளனுப்பி இருக்கிறானே என்று கண்ணன் மேல் கோபம் வந்தது ஷாயிபாவுக்கு. அடுத்த கணம் அவள் தன்னைச் சமாளித்துக்கொண்டு ஆடைகளையும், நகைகளையும் மாற்றிக்கொண்டு திரிவக்கரையுடன் கிளம்பினாள். வெளியே அரண்மனை உத்தியானவனத்தில் ஒரு மாமரத்தின் அடியில் கிடந்த ஒரு கல்லால் ஆன ஆசனத்தின் மீது அமர்ந்திருந்தான் கண்ணன். அருகே ஷ்வேதகேது.
அந்த மாமரத்தடி கண்ணனுக்கு மிகவும் பிடித்தமானது என்றும் கண்ணன் தன் பொழுதை எல்லாம் இங்கேதான் கழிப்பான் என்றும் அவள் அறிந்திருக்கிறாள். நல்ல மழைக்காலத்திலும், கடும் பனிக்காலத்திலும் தவிர மற்ற நேரங்களில் திருமணம் ஆகாத இளைஞர்கள் இம்மாதிரி வெட்டவெளியிலேயே தங்கள் இரவுகளையும் கழித்தனர். அங்கேயே தூங்கவும் செய்தனர். அப்படிக் கண்ணன் தூங்கும் இடம் இதுதான் எனவும் எப்போதும் கூடவே உத்தவனும் இருப்பான் என்பதையும் ஷாயிபா ஏற்கெனவே அறிந்திருந்தாள். இந்த இடத்திற்குத் தான் நடு இரவில் வந்து கண்ணனைக் கொல்லவும் உத்தேசித்திருந்தாள். அவள் சிந்தனையைத் தடை செய்வது போல் கண்ணன் குரல் கேட்டது.
“இதோ பார் சகோதரி! உன்னுடைய பொக்கிஷத்தை உன்னிடம் ஒப்படைக்கிறேன். இவரைச் சாதாரணமானவராக எண்ணாதே. எனக்கு குருவாகவும், ஆயுதப் பயிற்சி கற்றுக் கொடுக்கும் ஆசானாகவும் இருந்தவர். இவர் அறியாத அஸ்திர, சஸ்திர வித்தைகளே இல்லை. இப்போது குண்டினாபுரத்தில் ஒரு ஆசிரமம் அமைக்க மன்னனிடம் அநுமதி பெற்றிருக்கிறார். அங்கிருக்கும் இளம் போஜர்களுக்கு ஆயுதப் பயிற்சியும் சாஸ்திரப் பயிற்சியும், மற்றும் எல்லா வித்தைகளையும் கற்பிக்கப்போகிறார். தற்சமயம் உன்னுடைய பொறுப்பை நான் ஏற்றிருப்பதால் உன்னை மணக்க என் அநுமதி வேண்டி வந்துள்ளார். இவருக்கு உடனடியாக மனைவிதேவையாம். அதுவும் உன்னைத் தான் மணப்பாராம். வேறு எவரையும் மணக்க மாட்டாராம். சற்றும் பொறுக்க இயலாது என்கிறார்.”
கண்ணனின் குரலில் இனம் காண இயலாததொரு மகிழ்வு. இவற்றைக் கூறிய கண்ணன் கலகலவெனச் சிரித்தான். ஷாயிபாவுக்கு ஆத்திரம் பொங்கியது. இப்போது தன் திருமணத்தைப் பற்றி யோசிக்கும் நிலையில் அவள் இல்லை. அதுவும் இந்தப்பாதகன், துரோகி, ஷ்வேதகேதுவின் முன்னிலையில் அதைக் குறித்து ஆலோசிக்கவும் பேசவும் அவள் சற்றும் தயாராக இல்லை. ஆனால் கண்ணன் கண்களில் இவை எதுவுமே படவில்லையா? அவன் மேலும் சொன்னான்:”இப்போது திரிவக்கரைக்கும் எனக்கும் வேறு வேலைகள் இருக்கின்றன. ஆகையால் உங்கள் இருவரையும் இங்கே விட்டுவிட்டு நாங்கள் எங்கள் வேலைகளைப் பார்க்கப்போகிறோம்.” கூறிய வண்ணம் கண்ணன் ஷ்வேதகேதுவைப் பார்த்து, “ஆசானே, உமக்கு ஏதேனும் தொந்தரை எனத் தோன்றினால் ஷாயிபாவுடன் அவளையும் கூட்டிக்கொண்டு நீர் இங்கிருந்து தப்பிச் செல்ல்லாம். ஹாஹாஹா, ஆனால் நான் பின் தொடர்ந்து வந்து உம்மைக் குரல் வளையை நெரித்துவிட்டு இவளைத் திரும்பக் கொண்டு வருவது என்றெல்லாம் செய்ய மாட்டேன். கலங்காதீர். இனி உம் பாடு, இவள் பாடு. வா திரிவக்கரை. நாம் செல்ல்லாம்.” கூறியவண்ணம் சிரித்துக்கொண்டே கண்ணன் திரிவக்கரையை அழைத்துக்கொண்டு அவ்விடம் விட்டு அகன்றான்.
Tuesday, April 5, 2011
ஷாயிபா காத்திருக்கிறாள், கண்ணன் வருவான் 2-ம் பாகம்!
ஷாயிபா ஷ்வேதகேதுவை வெறுக்கிறாள். முழு மனசோடு வெறுக்கிறாள். அந்தக் குரல்….. ஒரு காலத்தில் அவளுக்கு ஒரு இனிமையான சங்கீதம் போலக் கேட்ட அந்தக் குரல், இந்தக் கண்ணன் வந்ததும், எப்படி மாறி விட்டது?? ஆஹா, என்னென்ன கனவுகள் கண்டாள்? இந்த ஷ்வேதகேது தன் பெரியப்பாவை முழுமையாகக் கடவுளாக அனைவரும் வணங்கும் ஒரே ஈசனாக ஏற்றுக்கொண்டு விட்டான் என்பது உறுதியானதும், எவ்வாறேனும் பெரியப்பாவின் சம்மதத்தை வாங்கி அவனைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டுக்கொண்டிருந்தாளே! திருமணக் கனவுகளில் மூழ்கி இருந்தாளே! எல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போனதுவே! அதுவும் இந்தக் கண்ணனால் தானே! நன்றி கெட்டவன், நன்றி கெட்டவன். என்னென்ன செய்திருக்கிறோம் அவனுக்காக. எல்லாவற்றையும் மறந்து இந்தக் கண்ணனைக் கண்டதும், அவனுடைய இசைக்கு நடனமிடும் பாவையாக மாறிவிட்டானே.
ஆண்கள் அனைவரும் சாப்பிட அமர்ந்துவிட்டது அவர்கள் பேச்சிலிருந்து புரிந்தது. நடுவே வழக்கமான இடத்தில் வசுதேவர் அமர்ந்திருக்க, அவருக்கு அடுத்து அடுத்து அவருடைய சகோதரர்கள் வரிசைக்கிரமமாக அமர்ந்திருந்தனர். அதன் பின்னர் இளைய தலைமுறையினர் அனைவரும் அவரவர் வரிசைப்படி அமர்ந்தனர். கிருஷ்ணனும், உத்தவனும் அருகருகே அமர்ந்தனர். இந்தக் கண்ணன் மிகத் தந்திரக்காரன். அவனுடைய நடவடிக்கைகளில் குற்றம், குறை காணமுடியாதபடிக்கு தந்திரமாய் நடந்து கொள்கிறான். இந்த ஷ்வேதகேது, ம்ம்ம்ம்……. இப்போது அவனும் ஒரு குருவாம், ஆசாரியனாம், கர்காசாரியாருடனும், மற்ற ஆசாரியர்களோடும் ஆசாரியர்களுக்குரிய உயர்ந்த இடத்தில் அமர்ந்திருக்கிறான். பல மாதங்களாய் ஷ்வேதகேதுவை ஷாயிபா பார்க்கவே இல்லை. இப்போது வாய்ப்புக் கிடைக்கவும் நன்றாகப் பார்த்தாள். உடல் வலிமை முன்னைக்கிப்போது அதிகமாகி இருந்தாற்போல் தெரிகிறது. தலைமுடியை நன்கு ஒன்று சேர்த்துப் பின்னால் குடுமியாகக் கட்டி இருக்கிறான். இப்போது புதியதாய் தாடி ஒன்றும் வந்துள்ளது. நெற்றியில் எப்போதும் போல் புனித விபூதிச் சாம்பலின் அடையாளக் கீற்றுகள். ஆசாரியர்களுக்குரிய உடையை அணிந்து கொண்டு கம்பீரமாகக் காட்சி அளிக்கிறான். முகத்தின் ஒளியும், முகத்தில் காணப்படும் மகிழ்வும் இதுவரை காணாத ஒன்று. ஆஹா, இவ்வளவு மகிழ்வை கரவீரபுரத்தில் கண்டதே இல்லையே!
ஷ்வேதகேதுவுக்கும் ஷாயிபா தன்னைப் பார்ப்பது தெரிந்திருக்கவேண்டும். உள்ளத்தில் ஏதோ ஒன்று குறுகுறுக்க அவனும் சுற்றிச் சுற்றிப் பார்த்தான். கடைசியில் ஷாயிபாவைக் கண்டு விட்டான். கண்ட கண்கள் அங்கேயே நின்றன. அதே நேரம் ஷாயிபாவும் அவனைக் கண்டாள். இருவர் கண்களும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. மின்னலை மின்னல் வெட்டியதா? ஷாயிபா தன் கோபத்தையும், ஆத்திரத்தையும், ஆங்காரத்தையும் காட்டவேண்டி கோபமாய்த் தான் பார்த்தாள். அவ்வாறுதான் பார்க்க எண்ணினாள். ஆனால்,,,,,,,,ஆனால்……… அவளையும் அறியாமல் அவள் பார்வை கனிந்து தன் நட்பையும் அன்பையும் தெரியப் படுத்தியது. ஷ்வேதகேதுவுக்கு எதிர்பாரா அதிர்ச்சி. அவன் நட்பாகப் புன்னகைத்தான். ஷாயிபாவுக்கு அப்போது தான் ஏதோ புரிந்தாற்போல் தோன்ற அவள் திரும்பிப் புன்னகை செய்வதைத் தவிர்த்தாள். அவன் மேல் கோபத்தை வரவழைத்துக்கொண்டாள். மோசக்காரன்…..ஏமாற்றுக்காரன், ,,,துரோகி.
ஆனால்…..ஆனால்…….. கொல்லப்பட்ட என் பெரியப்பாவுக்குப் பின்னர் நான் விரும்பிய அன்பு செலுத்திய ஒரே மனிதன் இவன் தான். அவளால் தன் எண்ணங்களைத் தவிர்க்க முடியவில்லை, “ கடவுளே, ஓ கடவுளே, வாசுதேவா, ஸ்ரீகாலவ வாசுதேவரே, இந்த ஷ்வேதகேது கண்ணனுக்கு அடிமையாக மட்டும் இல்லை எனில், கண்ணனால் அவன் மனது மாறாமல் இருந்திருந்தால், நீரும் உயிரோடு இருந்திருந்தீர் எனில்….. ஆஹா, ஆஹா, எத்தகையதொரு அற்புதம் நடந்திருக்கும்? இந்த ஷ்வேதகேதுவை நான் திருமணம் செய்து கொண்டு கரவீரபுரத்தில் ஆனந்த வாழ்க்கைநடத்தி இருப்பேனே.
மற்றப் பெண்களைப் போல் ஷாயிபாவும் பரிமாற ஆரம்பித்தாள். ஒவ்வொருவராய்ப் பரிமாறிக்கொண்டு வர, கண்ணன் அருகேயும், ஷ்வேதகேது அருகேயும் பரிமாற வருகையில் அவள் இதயம் எழும்பிக் குதித்த்து. அவள் நெஞ்சம் போட்ட சப்தத்தில் அந்தச் சாப்பாட்டுக்கூடத்தில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைவார்களோ என்ற எண்ணமும் ஏற்பட்டது அவளுக்கு. மேலும் அந்த சப்தம் அனைவருக்கும் கேட்டு விடுமோ என்றும் எண்ணினாள். அவள் கண்ணனுக்குப் பரிமாறுகையில் இன்றிரவு கண்ணனா, ஷ்வேதகேதுவா? இருவரில் ஒருவர் என் கைகளால் கொல்லப் படுவர்கள். இருவரில் யார் கொல்லப் பட்டு மற்றவர் உயிருடன் இருந்தாலும் எனக்கு அதனால் லாபம் ஒன்றுமில்லை. அவள் இதயம் மேலும் படபடவெனத் துடிக்கக் கைகள் நடுங்கப்பரிமாறினாள் ஷாயிபா.
கண்ணன் முகத்தில் குறும்புச் சிரிப்பு. மெதுவாகக் கிசுகிசுவென்ற தொனியில், “இதோ பார் ஷாயிபா, இந்தப் பொல்லாத ஆசாரியனை சாப்பாட்டுக்குப் பின்னர் உன்னிடம் ஒப்படைக்கப் போகிறேன். உன்பாடு, அவன் பாடு.” ஷ்வேதகேதுவைச் சுட்டிக்காட்டிக் கூறிய கண்ணன் கண்கள் குறும்பிலும் சந்தோஷத்திலும் கூத்தாடின.
ஆண்கள் அனைவரும் சாப்பிட அமர்ந்துவிட்டது அவர்கள் பேச்சிலிருந்து புரிந்தது. நடுவே வழக்கமான இடத்தில் வசுதேவர் அமர்ந்திருக்க, அவருக்கு அடுத்து அடுத்து அவருடைய சகோதரர்கள் வரிசைக்கிரமமாக அமர்ந்திருந்தனர். அதன் பின்னர் இளைய தலைமுறையினர் அனைவரும் அவரவர் வரிசைப்படி அமர்ந்தனர். கிருஷ்ணனும், உத்தவனும் அருகருகே அமர்ந்தனர். இந்தக் கண்ணன் மிகத் தந்திரக்காரன். அவனுடைய நடவடிக்கைகளில் குற்றம், குறை காணமுடியாதபடிக்கு தந்திரமாய் நடந்து கொள்கிறான். இந்த ஷ்வேதகேது, ம்ம்ம்ம்……. இப்போது அவனும் ஒரு குருவாம், ஆசாரியனாம், கர்காசாரியாருடனும், மற்ற ஆசாரியர்களோடும் ஆசாரியர்களுக்குரிய உயர்ந்த இடத்தில் அமர்ந்திருக்கிறான். பல மாதங்களாய் ஷ்வேதகேதுவை ஷாயிபா பார்க்கவே இல்லை. இப்போது வாய்ப்புக் கிடைக்கவும் நன்றாகப் பார்த்தாள். உடல் வலிமை முன்னைக்கிப்போது அதிகமாகி இருந்தாற்போல் தெரிகிறது. தலைமுடியை நன்கு ஒன்று சேர்த்துப் பின்னால் குடுமியாகக் கட்டி இருக்கிறான். இப்போது புதியதாய் தாடி ஒன்றும் வந்துள்ளது. நெற்றியில் எப்போதும் போல் புனித விபூதிச் சாம்பலின் அடையாளக் கீற்றுகள். ஆசாரியர்களுக்குரிய உடையை அணிந்து கொண்டு கம்பீரமாகக் காட்சி அளிக்கிறான். முகத்தின் ஒளியும், முகத்தில் காணப்படும் மகிழ்வும் இதுவரை காணாத ஒன்று. ஆஹா, இவ்வளவு மகிழ்வை கரவீரபுரத்தில் கண்டதே இல்லையே!
ஷ்வேதகேதுவுக்கும் ஷாயிபா தன்னைப் பார்ப்பது தெரிந்திருக்கவேண்டும். உள்ளத்தில் ஏதோ ஒன்று குறுகுறுக்க அவனும் சுற்றிச் சுற்றிப் பார்த்தான். கடைசியில் ஷாயிபாவைக் கண்டு விட்டான். கண்ட கண்கள் அங்கேயே நின்றன. அதே நேரம் ஷாயிபாவும் அவனைக் கண்டாள். இருவர் கண்களும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. மின்னலை மின்னல் வெட்டியதா? ஷாயிபா தன் கோபத்தையும், ஆத்திரத்தையும், ஆங்காரத்தையும் காட்டவேண்டி கோபமாய்த் தான் பார்த்தாள். அவ்வாறுதான் பார்க்க எண்ணினாள். ஆனால்,,,,,,,,ஆனால்……… அவளையும் அறியாமல் அவள் பார்வை கனிந்து தன் நட்பையும் அன்பையும் தெரியப் படுத்தியது. ஷ்வேதகேதுவுக்கு எதிர்பாரா அதிர்ச்சி. அவன் நட்பாகப் புன்னகைத்தான். ஷாயிபாவுக்கு அப்போது தான் ஏதோ புரிந்தாற்போல் தோன்ற அவள் திரும்பிப் புன்னகை செய்வதைத் தவிர்த்தாள். அவன் மேல் கோபத்தை வரவழைத்துக்கொண்டாள். மோசக்காரன்…..ஏமாற்றுக்காரன், ,,,துரோகி.
ஆனால்…..ஆனால்…….. கொல்லப்பட்ட என் பெரியப்பாவுக்குப் பின்னர் நான் விரும்பிய அன்பு செலுத்திய ஒரே மனிதன் இவன் தான். அவளால் தன் எண்ணங்களைத் தவிர்க்க முடியவில்லை, “ கடவுளே, ஓ கடவுளே, வாசுதேவா, ஸ்ரீகாலவ வாசுதேவரே, இந்த ஷ்வேதகேது கண்ணனுக்கு அடிமையாக மட்டும் இல்லை எனில், கண்ணனால் அவன் மனது மாறாமல் இருந்திருந்தால், நீரும் உயிரோடு இருந்திருந்தீர் எனில்….. ஆஹா, ஆஹா, எத்தகையதொரு அற்புதம் நடந்திருக்கும்? இந்த ஷ்வேதகேதுவை நான் திருமணம் செய்து கொண்டு கரவீரபுரத்தில் ஆனந்த வாழ்க்கைநடத்தி இருப்பேனே.
மற்றப் பெண்களைப் போல் ஷாயிபாவும் பரிமாற ஆரம்பித்தாள். ஒவ்வொருவராய்ப் பரிமாறிக்கொண்டு வர, கண்ணன் அருகேயும், ஷ்வேதகேது அருகேயும் பரிமாற வருகையில் அவள் இதயம் எழும்பிக் குதித்த்து. அவள் நெஞ்சம் போட்ட சப்தத்தில் அந்தச் சாப்பாட்டுக்கூடத்தில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைவார்களோ என்ற எண்ணமும் ஏற்பட்டது அவளுக்கு. மேலும் அந்த சப்தம் அனைவருக்கும் கேட்டு விடுமோ என்றும் எண்ணினாள். அவள் கண்ணனுக்குப் பரிமாறுகையில் இன்றிரவு கண்ணனா, ஷ்வேதகேதுவா? இருவரில் ஒருவர் என் கைகளால் கொல்லப் படுவர்கள். இருவரில் யார் கொல்லப் பட்டு மற்றவர் உயிருடன் இருந்தாலும் எனக்கு அதனால் லாபம் ஒன்றுமில்லை. அவள் இதயம் மேலும் படபடவெனத் துடிக்கக் கைகள் நடுங்கப்பரிமாறினாள் ஷாயிபா.
கண்ணன் முகத்தில் குறும்புச் சிரிப்பு. மெதுவாகக் கிசுகிசுவென்ற தொனியில், “இதோ பார் ஷாயிபா, இந்தப் பொல்லாத ஆசாரியனை சாப்பாட்டுக்குப் பின்னர் உன்னிடம் ஒப்படைக்கப் போகிறேன். உன்பாடு, அவன் பாடு.” ஷ்வேதகேதுவைச் சுட்டிக்காட்டிக் கூறிய கண்ணன் கண்கள் குறும்பிலும் சந்தோஷத்திலும் கூத்தாடின.
Thursday, March 31, 2011
ஷாயிபாவின் வேதனை! கண்ணன் வருவான் 2ம், பாகம்
கண்ணன் குழந்தையாக இருந்தபோது பிருந்தாவனத்தின் கோபிகைகள் எல்லாரும் அவனுடைய சாகசங்களைப் பாடல்களாகப் பாடி ஆடுவார்களாமே! உண்மையாய் இருக்குமா?? இருக்கலாம்; இங்கே தான் பார்க்கிறேனே, எல்லாரிடமும் நட்புப் பாராட்டுகிறான். நல்லவர், கெட்டவர் என்ற பாகுபாடோ, பணக்காரர், ஏழை என்ற பாகுபாடோ, உயர்ந்த பதவியில் இருப்பவர், தொண்டூழியர் என்ற பாகுபாடோ பார்க்காமல் அனைவரிடமும் ஒரே மாதிரியான அன்பைக் காட்டிப் பழகுகிறான். யாரிடமும் கடுமையாக நடந்து கொள்வதில்லை. சுயநலமாய்த் தன்னலம் மட்டுமே கருதியும் பேச்சோ, செய்கையோ இல்லை. அவனை அண்டி இருப்பவர்கள் கூட அவனுக்குக் கீழே தாங்கள் இருப்பதாய் நினைக்காமல் அவனும் தங்களில் ஒருவன் என்றே எண்ணுகின்றனர். இது எவ்வாறு முடிகிறது?? ஆச்சரியம் மேலிட்டது ஷாயிபாவுக்கு. ஷாயிபாவிடமும் அவன் ஒரு சகோதர பாசத்தையே காட்டி வருகிறான். அவன் சொன்னதும் அவ்வாறே. அதே போல் பாசத்துடன் இருக்கிறான். மாறுபட்ட நோக்கோடு ஒரு விநாடியும் பார்க்கவில்லை. இல்லை, இல்லை; இது ஒருக்காலும் இயலாத ஒன்று.. போலி வேஷம் போடுகிறானோ? ம்ம்ம்ம்?? அப்படித் தான் இருக்கவேண்டும். ஆனால்………..ஆனால்…………… நான் எவ்வளவு திட்டினாலும், என்ன கடுமையான வார்த்தைகளைப் பிரயோகம் செய்தாலும், அவன் கண்கள் ஒரு விநாடி இமைத்தலில் கூடத் தன் மேல் அவனுக்கு இருக்கும் வெறுப்பைக் காட்டியதில்லை. எப்போதும் போல் சிரிக்கும் கண்கள்.
அவன் என்னை எவ்விதத்திலேனும் சந்தோஷப்படுத்தவே முயல்கிறான். நான் என்ன வேண்டுமென்று கேட்கிறேனோ எவ்வாறேனும், அதை வரவழைக்கிறான். என் திருப்தியையே அவன் முக்கியக் கடமையாகக் கொண்டிருப்பது போல் நடந்து கொள்கிறான். ம்ம்ம்ம்ம்???? இந்த வசுதேவரின் குடும்பமே விசித்திரமான நடவடிக்கைகளைக் கொண்டிருக்கிறது. கரவீரபுரத்தில் நம் குடும்பத்தில் பெரியப்பா இட்டது தான் சட்டம். வேறு எவரும் ஒரு வார்த்தை கூடப் பேச முடியாது. அப்படிப் பேசினாலோ அரச குடும்பத்தில் அனைவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்வதிலும், ஒருவரை ஒருவர் ஏசுவதிலும் போய் முடியும். ஒருவர் இன்னொருவரிடம் கடுமையாக நடந்து கொள்வார். ஏன், பெரியப்பா எனக்கு அளித்த அதிகாரத்தின் மூலம் நான் ராணி பத்மாவதியையும், அவள் ஒரே குமாரனையும் எப்படி அடக்கி ஒடுக்கி வைத்திருந்தேன். என்னைக் கண்டாலே ராணி பத்மாவதி நடுங்குவாளே! இங்கேயோ! ஹும், இந்தக் கம்சாவும், அவள் மகன் ப்ருஹத்பாலனும் மட்டுமே என்னோடு ஒத்துப் போவார்கள், போகிறார்கள். கண்ணன் ஒரு பொல்லாத போக்கிரி என்பதையும், அப்பாவிகளின் உயிரைப் பறிப்பதை ஒரு விளையாட்டாகக் கொண்டிருக்கிறான் என்பதையும் அவர்கள் இருவர் மட்டுமே ஒத்துக்கொள்வார்கள். வேறு எவரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.
கண்ணன் மேல் ஷாயிபாவுக்கு வெறுப்பும், கோபமும் அதிகம் ஆனது. கம்சாவின் அறைக்குப் போனபொழுது எவ்வாறோ ஒரு கத்தியைக் கண்டெடுத்துக் கொண்டு வந்திருந்தாள் ஷாயிபா. கம்சா கவனித்ததாய்க் காட்டிக்கொள்ளவில்லை. கவனித்திருந்தாலும் தன் முகத்தை அப்பால் திருப்பிக் கொண்டு விட்டிருந்தாள். ஆகவே ஷாயிபா அந்தக் கத்தியை எடுத்து வந்துவிட்டாள். ஆம், ஆம், இந்தக் கண்ணன் என்பவனை நான் வெறுக்கிறேன். அவனைக் கண்டால் எனக்குப் பிடிக்கவில்லை. இருக்கட்டும், இருக்கட்டும், இன்று மாலையோ அல்லது நாளைக்காலையோ அவன் வழக்கப்படி இங்கே வருவான். என்னையும் காண வருவான். அப்போது பார்த்துக்கொள்ளலாம். அட., தேவகி அம்மா தன் வழிபாட்டை முடித்துக்கொண்டுவிட்டார் போல் தெரிகிறதே. ஆம், ஆம்,. அவர் மற்றப் பெண்களுக்கு மதிய உணவுக்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லிக் கட்டளை இடுகிறார். நாமும் போகலாம். வழக்கம் போல் உதவிகளைச் செய்துவிடுவோம். அப்போது தான் நம் மேல் சந்தேகம் எதுவும் வராது, ஷாயிபா தேவகியைத் தேடிச் சென்றாள்.
வெளி முற்றத்தில் ரதங்கள் நிறுத்தப்படும் ஓசையும், குதிரைகளின் கனைப்பும், அதிலிருந்து இறங்கும் மனிதர்களின் பேச்சும், சிரிப்பும் கலந்து கேட்டது. ரதச் சக்கரங்கள் கிறீச்சென்ற சப்தத்தோடு நிறுத்தப் படுவதையும் இளைஞர்கள் ஆரவாரம் செய்து கொண்டு ரதத்திலிருந்து குதிப்பதும் கேட்ட்து. எல்லாருடைய குரல்களும் கலந்து கேட்டாலும் ஷாயிபாவால் இரண்டு குரல்களை மட்டும் இனம் பிரிக்க முடிந்தது. ஒன்று கண்ணனின் மிருதுவான, மென்மையான குரல். வழக்கம் போல் உற்சாகம் காணப்பட்டது. இன்னொன்று,………….. இன்னொன்று……………. ஆம், ஆம், அது ஷ்வேதகேதுவின் குரல். அவன் நேற்று முன் தினமே திரும்பிவிட்டான் என்பதை ஷாயிபா அனைவரும் பேசிக்கொண்டதில் இருந்து அறிந்திருந்தாள். கடைசியில் அவன் வந்துவிட்டான். ஷ்வேதகேது, ஷ்வேதகேது/…….. யாரை அவள் ஒருகாலத்தில் மிகவும் விரும்பினாளோ, இப்போது யாரை அவள் கண்களால் காணவும் விரும்பவில்லையோ, அந்த ஷ்வேதகேது, அவளையும், அவள் வழிபட்டுக்கொண்டிருந்த கடவுளான ஸ்ரீகாலவ வாசுதேவனையும் மோசமான முறையில் ஏமாற்றின ஷ்வேதகேது/…………………. வந்துவிட்டான், ஆம் வந்தே விட்டான். ஷாயிபாவின் உள்ளம் குமுறியது.
அவன் என்னை எவ்விதத்திலேனும் சந்தோஷப்படுத்தவே முயல்கிறான். நான் என்ன வேண்டுமென்று கேட்கிறேனோ எவ்வாறேனும், அதை வரவழைக்கிறான். என் திருப்தியையே அவன் முக்கியக் கடமையாகக் கொண்டிருப்பது போல் நடந்து கொள்கிறான். ம்ம்ம்ம்ம்???? இந்த வசுதேவரின் குடும்பமே விசித்திரமான நடவடிக்கைகளைக் கொண்டிருக்கிறது. கரவீரபுரத்தில் நம் குடும்பத்தில் பெரியப்பா இட்டது தான் சட்டம். வேறு எவரும் ஒரு வார்த்தை கூடப் பேச முடியாது. அப்படிப் பேசினாலோ அரச குடும்பத்தில் அனைவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்வதிலும், ஒருவரை ஒருவர் ஏசுவதிலும் போய் முடியும். ஒருவர் இன்னொருவரிடம் கடுமையாக நடந்து கொள்வார். ஏன், பெரியப்பா எனக்கு அளித்த அதிகாரத்தின் மூலம் நான் ராணி பத்மாவதியையும், அவள் ஒரே குமாரனையும் எப்படி அடக்கி ஒடுக்கி வைத்திருந்தேன். என்னைக் கண்டாலே ராணி பத்மாவதி நடுங்குவாளே! இங்கேயோ! ஹும், இந்தக் கம்சாவும், அவள் மகன் ப்ருஹத்பாலனும் மட்டுமே என்னோடு ஒத்துப் போவார்கள், போகிறார்கள். கண்ணன் ஒரு பொல்லாத போக்கிரி என்பதையும், அப்பாவிகளின் உயிரைப் பறிப்பதை ஒரு விளையாட்டாகக் கொண்டிருக்கிறான் என்பதையும் அவர்கள் இருவர் மட்டுமே ஒத்துக்கொள்வார்கள். வேறு எவரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.
கண்ணன் மேல் ஷாயிபாவுக்கு வெறுப்பும், கோபமும் அதிகம் ஆனது. கம்சாவின் அறைக்குப் போனபொழுது எவ்வாறோ ஒரு கத்தியைக் கண்டெடுத்துக் கொண்டு வந்திருந்தாள் ஷாயிபா. கம்சா கவனித்ததாய்க் காட்டிக்கொள்ளவில்லை. கவனித்திருந்தாலும் தன் முகத்தை அப்பால் திருப்பிக் கொண்டு விட்டிருந்தாள். ஆகவே ஷாயிபா அந்தக் கத்தியை எடுத்து வந்துவிட்டாள். ஆம், ஆம், இந்தக் கண்ணன் என்பவனை நான் வெறுக்கிறேன். அவனைக் கண்டால் எனக்குப் பிடிக்கவில்லை. இருக்கட்டும், இருக்கட்டும், இன்று மாலையோ அல்லது நாளைக்காலையோ அவன் வழக்கப்படி இங்கே வருவான். என்னையும் காண வருவான். அப்போது பார்த்துக்கொள்ளலாம். அட., தேவகி அம்மா தன் வழிபாட்டை முடித்துக்கொண்டுவிட்டார் போல் தெரிகிறதே. ஆம், ஆம்,. அவர் மற்றப் பெண்களுக்கு மதிய உணவுக்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லிக் கட்டளை இடுகிறார். நாமும் போகலாம். வழக்கம் போல் உதவிகளைச் செய்துவிடுவோம். அப்போது தான் நம் மேல் சந்தேகம் எதுவும் வராது, ஷாயிபா தேவகியைத் தேடிச் சென்றாள்.
வெளி முற்றத்தில் ரதங்கள் நிறுத்தப்படும் ஓசையும், குதிரைகளின் கனைப்பும், அதிலிருந்து இறங்கும் மனிதர்களின் பேச்சும், சிரிப்பும் கலந்து கேட்டது. ரதச் சக்கரங்கள் கிறீச்சென்ற சப்தத்தோடு நிறுத்தப் படுவதையும் இளைஞர்கள் ஆரவாரம் செய்து கொண்டு ரதத்திலிருந்து குதிப்பதும் கேட்ட்து. எல்லாருடைய குரல்களும் கலந்து கேட்டாலும் ஷாயிபாவால் இரண்டு குரல்களை மட்டும் இனம் பிரிக்க முடிந்தது. ஒன்று கண்ணனின் மிருதுவான, மென்மையான குரல். வழக்கம் போல் உற்சாகம் காணப்பட்டது. இன்னொன்று,………….. இன்னொன்று……………. ஆம், ஆம், அது ஷ்வேதகேதுவின் குரல். அவன் நேற்று முன் தினமே திரும்பிவிட்டான் என்பதை ஷாயிபா அனைவரும் பேசிக்கொண்டதில் இருந்து அறிந்திருந்தாள். கடைசியில் அவன் வந்துவிட்டான். ஷ்வேதகேது, ஷ்வேதகேது/…….. யாரை அவள் ஒருகாலத்தில் மிகவும் விரும்பினாளோ, இப்போது யாரை அவள் கண்களால் காணவும் விரும்பவில்லையோ, அந்த ஷ்வேதகேது, அவளையும், அவள் வழிபட்டுக்கொண்டிருந்த கடவுளான ஸ்ரீகாலவ வாசுதேவனையும் மோசமான முறையில் ஏமாற்றின ஷ்வேதகேது/…………………. வந்துவிட்டான், ஆம் வந்தே விட்டான். ஷாயிபாவின் உள்ளம் குமுறியது.
Sunday, March 27, 2011
கம்சாவின் சாகசம்! கண்ணன் வருவான்! 2-ம் பாகம்!
மிகவும் சாமர்த்தியமாகக் கம்சா, “ஓ, கடவுளே, என் கடவுளே, மஹாதேவா! நீ எங்கே போய்விட்டாய்! இந்த அக்கிரமம் உன் கண்களில் படவில்லையா?? இந்த இடையன் கோபாலன் எப்போது இறப்பான்? அவன் அட்டகாசங்களுக்கு ஒரு முடிவு எப்போது வரும்?? பாவம் , இந்த அபலைப்பெண் ஷாயிபா, தெய்வத்துக்கு நிகரான, ஏன் அவரே ஒரு தெய்வமான அவள் பெரியப்பன் ஸ்ரீகாலவ வாசுதேவனைக் கொல்லும்போது நீ ஏன் அந்த கோகுலக் கண்ணனைக் கொல்லவில்லை? அல்லது அவனைத் தடுத்தாவது இருக்கலாமே? இது என்ன அநீதி?” கண்கள் மழையென வர்ஷிக்க கம்சா அழுததைக் கண்ட ஷாயிபா உண்மையிலேயே தன்னுடைய துக்கத்தை மறந்தே போனாள். கம்சாவைத் தேற்ற ஆரம்பித்தாள். “ அம்மா, கவலைப்படாதீர்கள். அந்தக் கண்ணனுக்கு, என் பெரியப்பாவைக் கொன்றவனுக்கு ஒரு முடிவு வந்தே தீரும். விதி வலியது. அந்த விதியின் கரங்களில் அவன் மாட்டிக்கொண்டே தீருவான். எனக்கு அது நிச்சயம் தெரிகிறது. அவனைச் சும்மா விடமாட்டேன்!” என்றாள் பற்களைக் கடித்துக்கொண்டு.
தான் வந்த வேலை முடிந்ததைப் புரிந்து கொண்ட கம்சா அங்கிருந்து பிரியாவிடை பெற்றுச் சென்றாள். ஷாயிபாவோ உண்ணாமல், உறங்காமல் கண்ணனை எவ்விதம் பழி தீர்ப்பது என்ற யோசனையில் ஆழ்ந்தாள். தன் பெரியப்பாவான ஸ்ரீகாலவனின் ஆன்மா அப்போது தான் அமைதி அடையும் எனவும் நம்பினாள். மறுநாள் பொழுது புலர்வதற்கு ஒரு யுகம் ஆனாற்போலிருந்தது அவளுக்கு. காலையில் அனைத்துப் பெண்டிருடனும், நதிக்கரையில் அரண்மனைப் பெண்கள் குளிக்கவென ஏற்படுத்தப் பட்டிருந்த படித்துறையில் குளித்துவிட்டு அரண்மனைக்கு வந்து தன் பெரியப்பாவின் சிலைக்கு வழிபாடுகள் செய்து அதன் காலடியில் தன் தலையை வைத்து வணங்கினாள் ஷாயிபா. கண்ணீர் பெருக்கெடுத்த்து அவளுக்கு. எப்படிச் செல்வாக்கோடும், பல வீரர்களின் காவலுடனும் எவரும் தனக்கு நிகரில்லை என்றிருந்த நான் இன்று இன்னொருவர் பாதுகாப்பில் இன்னொருவரின் அரண்மனையில் அவர்கள் பரிதாபத்தின் பேரில் போடும் சாப்பாடைச் சாப்பிட்டு உயிர் வாழ்கிறேனே. இதற்கொரு முடிவு கட்டவேண்டும். பெரியப்பாவின் சிலையைப் பாரத்தாள். இரு கைகளையும் கூப்பியவண்ணம், " ஸ்ரீகாலவ வாசுதேவரே, என் கடவுளே, உங்களுக்கும் மேல் ஒருவரைக் கடவுளாக நான் என்றும் எண்ணியதில்லை. இந்தக் கண்ணனைப் பழிவாங்குவதற்குரிய தைரியத்தை எனக்குக் கொடுங்கள். அவன் இறந்தே ஆகவேண்டும். அது தவிர்க்க முடியாது என் பிரபுவே!” என்று மனமுருகப் பிரார்த்தனை செய்தாள்.
அப்போது அடுத்திருந்த தேவகி அம்மாவின் அறையிலிருந்து மணி அடிக்கும் ஓசையும், கற்பூர ஆரத்தியின் மணமும் எழுந்து இந்த அறையையும் நிறைத்தது. கூடவே திரிவக்கரையின் குரலில் கண்ணன் பேரில் பாடப்படும் ஆரத்திப்பாடலின் ஓசையும் கேட்டது. பல்லைக் கடித்தாள் ஷாயிபா. கண்ணன், கண்ணன், கண்ணன், கிருஷ்ண வாசுதேவன்! ஹும், பைத்தியம் பிடித்தாற்போல் அவனை நினைந்து நினைந்து உருகுகின்றனர் இந்தப்பெண்களெல்லாம். கொலைகாரன், கொலைகாரன், கொடூரமான விதத்தில் என் பெரியப்பாவைக் கொன்ற இந்தக் கொலைகாரனை நினைத்துக்கொண்டே வாழ்கின்றனரே இந்தப் பெண்கள். வெட்கமாயில்லை இவர்களுக்கு?”
சற்று தூரத்தில் வசுதேவர் ரதத்தைத் தயார் செய்யும்படி ஆட்களுக்குக் கட்டளை இடும் குரல் கேட்டது. ஓ, சாந்தீபனியின் ஆசிரமத்திலிருந்து கண்ணனை அழைத்து வர ரதம் போகப் போகிறதா? அங்கே தான் யாதவ குல இளைஞர்களுக்கு அவன் ரதப் பயிற்சியோடு மற்ற பயிற்சிகளும் கொடுத்து வருகிறான். அங்கிருந்து பிள்ளையை இவர் அழைத்துவரப்போகிறாரோ? ஹும், ரொம்பத் தான் செல்லம் கொடுத்தாகிறது இந்தக் கொலைகாரக் கண்ணனுக்கு. கண்ணனும், அவன் சகோதரனும் வசுதேவருடன் வந்ததும், அனைவருமாய் அமர்ந்து மதிய உணவு உட்கொள்வார்கள். தேவகி அம்மா தன் கைகளாலேயே அனைவருக்கும் பிடித்த உணவு வகைகளைப் பரிமாறுவாள். குடும்பத் தலைவி என்ற முறையில் இது அவள் சேவையாம்! ஹும், ஹும், விசித்திரமான மனிதர்கள். இவர்கள் பழகும் விதமே விசித்திரமாய் உள்ளது. ஒருவருக்கொருவர் கடிந்து கொள்வதே இல்லை. அபிப்பிராய பேதங்கள் இருந்தாலும் மென்மையாகவே சொல்கின்றனர். காலை எழுந்தால் இரவு படுக்கும் வரையில் எல்லாம் அந்த அந்த நேரத்துக்கு நடக்கின்றன. இதை எல்லாம் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்வதும் இல்லை. எல்லாருமே ஒத்திசைந்து செய்கின்றனரே! அதோடு குடும்பம் முழுதும் ஒரே நூலில் கட்டப் பட்ட மாலை போல் இருக்கின்றது. ஒருவருக்கொருவர் எவ்வளவு அன்பும், பாசமும் வைத்திருக்கின்றனர். அனைவருக்குமே அவரவர்களின் தாய், தந்தை என்றால் பாசத்தோடு மிக மரியாதையும் காட்டுகின்றனர்.
ஆனால் ஆனால் கரவீரபுரத்தில் இப்படி இல்லை. இப்படிப் பார்த்ததே கிடையாது. அங்கே சத்தமாயும், கோபமாயும் பேசிக்கொள்ளலாம். இங்கே பெரியவர்கள் இருந்தால் அவர்களின் எதிரே வயதில் சிறியவர்கள் மிக மிக மெதுவாய் ரகசியம் பேசுவது போல் அல்லவோ பேச வேண்டி இருக்கிறது. அவ்வளவு ஏன்? நேற்று வந்து அவ்வளவு குற்றமும், குறையும் கண்டு அழுது தீர்த்தாளே கண்ணனின் சித்தி கம்சா. அவளும் சரி, அவள் மகன் ப்ருஹத்பாலன் என்பவனும் சரி, அவர்களும் இந்தக் கட்டுப்பாடுகளை எல்லாம் பின்பற்றித் தான் வாழ்கின்றனர். விட்டுக் கொடுக்கவே இல்லை.
ஒரு கணம் கண்ணனின் சிரித்த முகம் ஷாயிபாவின் கண்களெதிரே தோன்றியது. மனதின் உணர்வுகள் தெரியும்படியான சிரிக்கும் கண்கள், மந்தகாசமான சிரிப்பு, அழகும், வலிமையும், எழிலும் நிறைந்திருக்கும் அவன் முகம், உடல், அவனுடைய அமைதி, சாந்தம், நிதானம், இவ்வுலகத்து மக்களுக்கெல்லாம் காட்டுவது போன்ற அளவற்ற அவன் கருணை, எல்லாம் அவள் நினைவில் வந்து மோதின. மற்றவர்களில் இருந்து அவன் தனித்துத் தெரிவதை உணர்ந்தாள் ஷாயிபா. இவ்வளவு பெருமைக்குரியவன் என்றாலும் அவன் காட்டும் பணிவும், மரியாதையும், பெரியவர்களிடம் காட்டும் விநயமும் அவள் கவனத்திற்கு வந்தது. கேட்டால் தவிர தன் கருத்தைப் பெரியவர்கள் எதிரே சொல்வதே இல்லை. அப்படிச் சொன்னாலும் அதை அநேகமாய் அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் தேவகி அம்மாவோ தன் மகன் கண்ணனை ஒரு கடவுள் என்றே சொல்கிறாள், நினைக்கிறாள், அப்படியே வணங்கி வாழ்கிறாள். ஆனால் கண்ணனின் சொற்களோ, செயல்களோ அவன் நடந்து கொள்ளும் விதமோ அப்படித் தெரியவில்லை. நம் பெரியப்பாவான ஸ்ரீகாலவர் வார்த்தைக்கு வார்த்தை தான் தான் பரவாசுதேவன் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். அனைவரையும் அதை ஒப்புக்கொள்ளவேண்டும் என்றும் நிர்பந்திப்பார். ஆனால் கண்ணன் ஒருமுறை கூடத் தன்னைக் கடவுள் எனச் சொல்லிக்கொள்ளவே இல்லை. அவன் கடவுள் தான் என்பது தனக்குத் தெரியும் என்பதையும் காட்டிக்கொள்ளவே இல்லை. எல்லாரையும் போல் மிகச் சாதாரணமாக நடந்து கொள்கிறான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. நிச்சயம் அவன் மற்றவர்களிலிருந்து மாறுபட்டே இருக்கிறான்.
தான் வந்த வேலை முடிந்ததைப் புரிந்து கொண்ட கம்சா அங்கிருந்து பிரியாவிடை பெற்றுச் சென்றாள். ஷாயிபாவோ உண்ணாமல், உறங்காமல் கண்ணனை எவ்விதம் பழி தீர்ப்பது என்ற யோசனையில் ஆழ்ந்தாள். தன் பெரியப்பாவான ஸ்ரீகாலவனின் ஆன்மா அப்போது தான் அமைதி அடையும் எனவும் நம்பினாள். மறுநாள் பொழுது புலர்வதற்கு ஒரு யுகம் ஆனாற்போலிருந்தது அவளுக்கு. காலையில் அனைத்துப் பெண்டிருடனும், நதிக்கரையில் அரண்மனைப் பெண்கள் குளிக்கவென ஏற்படுத்தப் பட்டிருந்த படித்துறையில் குளித்துவிட்டு அரண்மனைக்கு வந்து தன் பெரியப்பாவின் சிலைக்கு வழிபாடுகள் செய்து அதன் காலடியில் தன் தலையை வைத்து வணங்கினாள் ஷாயிபா. கண்ணீர் பெருக்கெடுத்த்து அவளுக்கு. எப்படிச் செல்வாக்கோடும், பல வீரர்களின் காவலுடனும் எவரும் தனக்கு நிகரில்லை என்றிருந்த நான் இன்று இன்னொருவர் பாதுகாப்பில் இன்னொருவரின் அரண்மனையில் அவர்கள் பரிதாபத்தின் பேரில் போடும் சாப்பாடைச் சாப்பிட்டு உயிர் வாழ்கிறேனே. இதற்கொரு முடிவு கட்டவேண்டும். பெரியப்பாவின் சிலையைப் பாரத்தாள். இரு கைகளையும் கூப்பியவண்ணம், " ஸ்ரீகாலவ வாசுதேவரே, என் கடவுளே, உங்களுக்கும் மேல் ஒருவரைக் கடவுளாக நான் என்றும் எண்ணியதில்லை. இந்தக் கண்ணனைப் பழிவாங்குவதற்குரிய தைரியத்தை எனக்குக் கொடுங்கள். அவன் இறந்தே ஆகவேண்டும். அது தவிர்க்க முடியாது என் பிரபுவே!” என்று மனமுருகப் பிரார்த்தனை செய்தாள்.
அப்போது அடுத்திருந்த தேவகி அம்மாவின் அறையிலிருந்து மணி அடிக்கும் ஓசையும், கற்பூர ஆரத்தியின் மணமும் எழுந்து இந்த அறையையும் நிறைத்தது. கூடவே திரிவக்கரையின் குரலில் கண்ணன் பேரில் பாடப்படும் ஆரத்திப்பாடலின் ஓசையும் கேட்டது. பல்லைக் கடித்தாள் ஷாயிபா. கண்ணன், கண்ணன், கண்ணன், கிருஷ்ண வாசுதேவன்! ஹும், பைத்தியம் பிடித்தாற்போல் அவனை நினைந்து நினைந்து உருகுகின்றனர் இந்தப்பெண்களெல்லாம். கொலைகாரன், கொலைகாரன், கொடூரமான விதத்தில் என் பெரியப்பாவைக் கொன்ற இந்தக் கொலைகாரனை நினைத்துக்கொண்டே வாழ்கின்றனரே இந்தப் பெண்கள். வெட்கமாயில்லை இவர்களுக்கு?”
சற்று தூரத்தில் வசுதேவர் ரதத்தைத் தயார் செய்யும்படி ஆட்களுக்குக் கட்டளை இடும் குரல் கேட்டது. ஓ, சாந்தீபனியின் ஆசிரமத்திலிருந்து கண்ணனை அழைத்து வர ரதம் போகப் போகிறதா? அங்கே தான் யாதவ குல இளைஞர்களுக்கு அவன் ரதப் பயிற்சியோடு மற்ற பயிற்சிகளும் கொடுத்து வருகிறான். அங்கிருந்து பிள்ளையை இவர் அழைத்துவரப்போகிறாரோ? ஹும், ரொம்பத் தான் செல்லம் கொடுத்தாகிறது இந்தக் கொலைகாரக் கண்ணனுக்கு. கண்ணனும், அவன் சகோதரனும் வசுதேவருடன் வந்ததும், அனைவருமாய் அமர்ந்து மதிய உணவு உட்கொள்வார்கள். தேவகி அம்மா தன் கைகளாலேயே அனைவருக்கும் பிடித்த உணவு வகைகளைப் பரிமாறுவாள். குடும்பத் தலைவி என்ற முறையில் இது அவள் சேவையாம்! ஹும், ஹும், விசித்திரமான மனிதர்கள். இவர்கள் பழகும் விதமே விசித்திரமாய் உள்ளது. ஒருவருக்கொருவர் கடிந்து கொள்வதே இல்லை. அபிப்பிராய பேதங்கள் இருந்தாலும் மென்மையாகவே சொல்கின்றனர். காலை எழுந்தால் இரவு படுக்கும் வரையில் எல்லாம் அந்த அந்த நேரத்துக்கு நடக்கின்றன. இதை எல்லாம் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்வதும் இல்லை. எல்லாருமே ஒத்திசைந்து செய்கின்றனரே! அதோடு குடும்பம் முழுதும் ஒரே நூலில் கட்டப் பட்ட மாலை போல் இருக்கின்றது. ஒருவருக்கொருவர் எவ்வளவு அன்பும், பாசமும் வைத்திருக்கின்றனர். அனைவருக்குமே அவரவர்களின் தாய், தந்தை என்றால் பாசத்தோடு மிக மரியாதையும் காட்டுகின்றனர்.
ஆனால் ஆனால் கரவீரபுரத்தில் இப்படி இல்லை. இப்படிப் பார்த்ததே கிடையாது. அங்கே சத்தமாயும், கோபமாயும் பேசிக்கொள்ளலாம். இங்கே பெரியவர்கள் இருந்தால் அவர்களின் எதிரே வயதில் சிறியவர்கள் மிக மிக மெதுவாய் ரகசியம் பேசுவது போல் அல்லவோ பேச வேண்டி இருக்கிறது. அவ்வளவு ஏன்? நேற்று வந்து அவ்வளவு குற்றமும், குறையும் கண்டு அழுது தீர்த்தாளே கண்ணனின் சித்தி கம்சா. அவளும் சரி, அவள் மகன் ப்ருஹத்பாலன் என்பவனும் சரி, அவர்களும் இந்தக் கட்டுப்பாடுகளை எல்லாம் பின்பற்றித் தான் வாழ்கின்றனர். விட்டுக் கொடுக்கவே இல்லை.
ஒரு கணம் கண்ணனின் சிரித்த முகம் ஷாயிபாவின் கண்களெதிரே தோன்றியது. மனதின் உணர்வுகள் தெரியும்படியான சிரிக்கும் கண்கள், மந்தகாசமான சிரிப்பு, அழகும், வலிமையும், எழிலும் நிறைந்திருக்கும் அவன் முகம், உடல், அவனுடைய அமைதி, சாந்தம், நிதானம், இவ்வுலகத்து மக்களுக்கெல்லாம் காட்டுவது போன்ற அளவற்ற அவன் கருணை, எல்லாம் அவள் நினைவில் வந்து மோதின. மற்றவர்களில் இருந்து அவன் தனித்துத் தெரிவதை உணர்ந்தாள் ஷாயிபா. இவ்வளவு பெருமைக்குரியவன் என்றாலும் அவன் காட்டும் பணிவும், மரியாதையும், பெரியவர்களிடம் காட்டும் விநயமும் அவள் கவனத்திற்கு வந்தது. கேட்டால் தவிர தன் கருத்தைப் பெரியவர்கள் எதிரே சொல்வதே இல்லை. அப்படிச் சொன்னாலும் அதை அநேகமாய் அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் தேவகி அம்மாவோ தன் மகன் கண்ணனை ஒரு கடவுள் என்றே சொல்கிறாள், நினைக்கிறாள், அப்படியே வணங்கி வாழ்கிறாள். ஆனால் கண்ணனின் சொற்களோ, செயல்களோ அவன் நடந்து கொள்ளும் விதமோ அப்படித் தெரியவில்லை. நம் பெரியப்பாவான ஸ்ரீகாலவர் வார்த்தைக்கு வார்த்தை தான் தான் பரவாசுதேவன் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். அனைவரையும் அதை ஒப்புக்கொள்ளவேண்டும் என்றும் நிர்பந்திப்பார். ஆனால் கண்ணன் ஒருமுறை கூடத் தன்னைக் கடவுள் எனச் சொல்லிக்கொள்ளவே இல்லை. அவன் கடவுள் தான் என்பது தனக்குத் தெரியும் என்பதையும் காட்டிக்கொள்ளவே இல்லை. எல்லாரையும் போல் மிகச் சாதாரணமாக நடந்து கொள்கிறான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. நிச்சயம் அவன் மற்றவர்களிலிருந்து மாறுபட்டே இருக்கிறான்.
Saturday, March 26, 2011
கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்
மகன் சென்றதும், பலத்த யோசனையில் ஆழ்ந்தாள் கம்சா. இரவு முழுதும் தூங்காமல் யோசித்தவளுக்கு விடிகாலையில் ஒரு யோசனை உதித்தது. விரைவில் எழுந்து காலைக்கடன்களை முடித்துக்கொண்டு வசுதேவரின் மாளிகைக்குச் சென்றாள். அங்கே தேவகியை சம்பிரதாயமாக மரியாதை நிமித்தம் பார்த்து விசாரித்தவள் நேரே சென்றது ஷாயிபாவிடம். ஷாயிபாவை அனைவரும் நெருங்க முடியாமல் இருந்த போதிலும் கம்சாவால் வெகு சுலபமாக அவள் மனதில் இடம் பிடிக்க முடிந்தது. அவள் சார்பாகவே பேசி அவள் மனதில் இடம் பிடித்த கம்சாவிடம் ஷாயிபா தன் அந்தரங்கங்களை எல்லாம் மனம் விட்டுப் பகிர்ந்து கொண்டாள். கரவீரபுரத்தில் அவளுடைய பெரியப்பாவின் ஆட்சியின் மகிமை பற்றியும், அங்கே அவளுக்கு இருந்த மரியாதையையும், அதிகாரத்தையும் குறித்து ஆதங்கத்துடன் கூறினாள். தன் பெரியப்பா உண்மையிலேயே கடவுளே என்றும், அவரை எதிர்த்து எவரும் பேசாமல் இருந்தனர் என்றும் ஷ்வேதகேதுவும் முதலில் அவருக்கு ஆதரவாகவே இருந்தான் எனவும், இந்தக் கிருஷ்ணன் வந்தே அனைத்தையும் மாற்றினான் என்றும் ஆத்திரத்துடன் கூறினாள்.
உயர்ந்த அரசபோகத்தில் தான் அநுபவித்துக்கொண்டிருந்த ஆட்சியின் அதிகாரத்தைக் கிருஷ்ணன் வந்து தன் பெரியப்பாவை வெட்டிச் சாய்த்ததின் மூலம் நிர்மூலமாக்கியதையும், அதற்கு உதவியது ஷ்வேதகேது எனவும் கூறினாள். இத்தனைக்கும் அவள், ஷாயிபா, கரவீரபுரத்தின் இளவரசியும் ஸ்ரீகாலவனின் நம்பிக்கைக்கும் அன்புக்கும் பாத்திரமானவளும் ஆன ஷாயிபா ஷ்வேதகேதுவை மகிழ்விக்க வேண்டி அவனிடம் தன் காதலைக் கூடத் தெரிவிக்க எண்ணி இருந்தாள். அப்படிப் பட்ட மாட்சிமை பொருந்திய ஸ்ரீகாலவ வாசுதேவனைக் கொன்றதோடு அல்லாமல் ஷாயிபாவின் மாட்சிமையும் அடியோடு நிர்மூலமாக்கப் பட்டது. எல்லாம் இந்தக் கண்ணனால். கம்சா அநுதாபத்தோடு கேட்பது ஷாயிபாவுக்குப் பிடித்திருந்தது. இந்த மாளிகையில் அனைவரும் கிருஷ்ணன் சொல்வதே சரியென்று கூறும்போது இந்தக் கம்சாவாவது தான் கூறுவதை அநுதாபத்துடன் கேட்டுக்கொண்டு தன்னுடைய கோபமும், துக்கமும் நியாயம் என்கிறாளே.
ஆனால் ஷாயிபா கம்சாவை அறிந்து கொள்ளவில்லை என்றே சொல்லலாம். சும்மா அநுதாபத்துடன் கேட்டுக்கொள்ள மட்டும் கம்சா அங்கே வரவில்லை. அவள் ஷாயிபாவின் பேச்சைக் கேட்டு விட்ட கண்ணீரெல்லாம் உண்மையல்ல. உள்ளுக்குள் அவள் ஷாயிபாவைத் தன் கைக்குள் போட்டுக்கொண்டு கண்ணனுக்கெதிராக ஒரு வலுவான கூட்டணி அமைக்க முயன்று கொண்டிருந்தாள். அதற்கான முதல்கட்ட நடவடிக்கையே ஷாயிபாவின் துக்கத்தைப் பங்கு போட்டுக்கொள்வது. ஆகவே ஷாயிபா கூறுகையில் அவளை ஆமோதிப்பதோடு, கண்ணன் எவ்வாறு தன்னை எதிர்ப்பவர்களை எல்லாம் வரிசையாக ஈவு இரக்கமின்றிக் கொன்று வருகிறான் என்பதையும் கூறி வந்தாள். அவள் சொந்த சகோதரன் ஆன கம்சனை எவ்வாறு சற்றும் கலக்கமோ, தயக்கமோ இன்றி மாமன் என்று கூடப் பார்க்காமல் கண்ணன் கொன்றான் என்பதை விவரித்தாள். கம்சா இன்று அநுபவிக்கும் அத்தனை துன்பத்திற்கும் மூல காரணமே இந்தக் கண்ணன் தான். வேறு எவரும் இல்லை. இப்படி இருவரும் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசிக்கொண்டதில் ஷாயிபாவின் கோபம் கொஞ்சம் அடங்கினாலும் கண்ணன் மேல் அளவுக்கதிகமான வெறுப்பு கொழுந்து விட்டெரிந்தது.
இப்போதோ கம்சா வந்து ஏதோ புதிய செய்தியைக் கூறுகிறாளே? தேவகியைப் பார்த்துவிட்டு ஷாயிபாவிடம் வந்த கம்சா அப்போது நடந்த ஆலோசனைக் கூட்டத்தின் மூலம் மதுராவின் வீரர்களுக்கும், இளைஞர்களுக்கும் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் புதியதொரு ஆபத்தைப் பற்றி அவளிடம் கூற ஆரம்பித்தாள். இதைக் குறித்து ஷாயிபாவிடம் கூற ஆரம்பித்த கம்சா ஓவென்று அழ ஆரம்பித்தாள். தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு, அந்தப் பொல்லாத போக்கிரியும் துஷ்டனும் ஆன கிருஷ்ணன் எப்படித் தன் அன்புக்குகந்த யுவராஜா பதவி வகிக்க வேண்டிய ப்ருஹத்பாலன் மேல் வஞ்சம் தீர்த்துக்கொண்டான் என்பதை விவரிக்க ஆரம்பித்தாள். தன் தகப்பன் உக்ரசேனர் உண்மையில் ப்ருஹத்பாலனுக்கே யுவராஜா பதவி அளிக்க விரும்பியதாகவும், இந்தக் கண்ணன் வந்ததும் அனைத்தும் மாறியதோடு அன்றி இப்போது புதியதொரு சூழ்ச்சி வலையை கண்ணன் பின்னி இருப்பதாயும் கூறினாள். தான் மகனை மரணத்தை நோக்கி அனுப்ப வேண்டியே அவனுக்கு யுவராஜா பதவியும் பட்டமும் கொடுக்கக் கண்ணன் சம்மதித்திருப்பதாயும், குண்டினாபுரம் சென்றால் தன் மகனுக்குக் காத்திருப்பது மரணமே என்றும் தீர்மானமாய்க் கூறினாள் கம்சா.
கம்சாவின் புலம்பல் தொடர்ந்தது. அவள் கணவன் தேவபாகனோ அல்லது மூத்த மகன் ஆன சித்ரகேதுவோ இந்த வழிக்கெல்லாம் வரமாட்டார்கள் இருவரும் தேவைக்கு மீறிய நல்லவர்கள். அவர்கள் வசுதேவன் சொல்லை ஒருக்காலும் மீறி நடக்க மாட்டார்கள். ஆகவே அவர்களிடம் போய் இதைச் சொல்ல முடியாது. அவளுடைய இன்னொரு இளைய மகனான உத்தவனோ கேட்கவே வேண்டாம். அந்தக் கிருஷ்ணனுக்கு அடிமை உத்தியோகம் செய்கிறான். அவனுக்குத் தாசானு தாசனாக இருக்கிறான். அவனைக் கண்ணன் தன் வேலைகளுக்கெல்லாம் ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொள்கிறான். ஷாயிபாவுக்கும் இதே எண்ணமே தோன்றியது. உத்தவனைக் கண்ணன் தன் இஷ்டத்துக்கு வளைக்கிறான் என்று அவளும் எண்ணினாள். அவள் முகபாவத்தையே கவனித்த கம்சா இதுதான் சமயம் என நினைத்து ஷாயிபாவைக் கட்டிக்கொண்டு இன்னும் புலம்பி அழ ஆரம்பித்தாள்.
உயர்ந்த அரசபோகத்தில் தான் அநுபவித்துக்கொண்டிருந்த ஆட்சியின் அதிகாரத்தைக் கிருஷ்ணன் வந்து தன் பெரியப்பாவை வெட்டிச் சாய்த்ததின் மூலம் நிர்மூலமாக்கியதையும், அதற்கு உதவியது ஷ்வேதகேது எனவும் கூறினாள். இத்தனைக்கும் அவள், ஷாயிபா, கரவீரபுரத்தின் இளவரசியும் ஸ்ரீகாலவனின் நம்பிக்கைக்கும் அன்புக்கும் பாத்திரமானவளும் ஆன ஷாயிபா ஷ்வேதகேதுவை மகிழ்விக்க வேண்டி அவனிடம் தன் காதலைக் கூடத் தெரிவிக்க எண்ணி இருந்தாள். அப்படிப் பட்ட மாட்சிமை பொருந்திய ஸ்ரீகாலவ வாசுதேவனைக் கொன்றதோடு அல்லாமல் ஷாயிபாவின் மாட்சிமையும் அடியோடு நிர்மூலமாக்கப் பட்டது. எல்லாம் இந்தக் கண்ணனால். கம்சா அநுதாபத்தோடு கேட்பது ஷாயிபாவுக்குப் பிடித்திருந்தது. இந்த மாளிகையில் அனைவரும் கிருஷ்ணன் சொல்வதே சரியென்று கூறும்போது இந்தக் கம்சாவாவது தான் கூறுவதை அநுதாபத்துடன் கேட்டுக்கொண்டு தன்னுடைய கோபமும், துக்கமும் நியாயம் என்கிறாளே.
ஆனால் ஷாயிபா கம்சாவை அறிந்து கொள்ளவில்லை என்றே சொல்லலாம். சும்மா அநுதாபத்துடன் கேட்டுக்கொள்ள மட்டும் கம்சா அங்கே வரவில்லை. அவள் ஷாயிபாவின் பேச்சைக் கேட்டு விட்ட கண்ணீரெல்லாம் உண்மையல்ல. உள்ளுக்குள் அவள் ஷாயிபாவைத் தன் கைக்குள் போட்டுக்கொண்டு கண்ணனுக்கெதிராக ஒரு வலுவான கூட்டணி அமைக்க முயன்று கொண்டிருந்தாள். அதற்கான முதல்கட்ட நடவடிக்கையே ஷாயிபாவின் துக்கத்தைப் பங்கு போட்டுக்கொள்வது. ஆகவே ஷாயிபா கூறுகையில் அவளை ஆமோதிப்பதோடு, கண்ணன் எவ்வாறு தன்னை எதிர்ப்பவர்களை எல்லாம் வரிசையாக ஈவு இரக்கமின்றிக் கொன்று வருகிறான் என்பதையும் கூறி வந்தாள். அவள் சொந்த சகோதரன் ஆன கம்சனை எவ்வாறு சற்றும் கலக்கமோ, தயக்கமோ இன்றி மாமன் என்று கூடப் பார்க்காமல் கண்ணன் கொன்றான் என்பதை விவரித்தாள். கம்சா இன்று அநுபவிக்கும் அத்தனை துன்பத்திற்கும் மூல காரணமே இந்தக் கண்ணன் தான். வேறு எவரும் இல்லை. இப்படி இருவரும் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசிக்கொண்டதில் ஷாயிபாவின் கோபம் கொஞ்சம் அடங்கினாலும் கண்ணன் மேல் அளவுக்கதிகமான வெறுப்பு கொழுந்து விட்டெரிந்தது.
இப்போதோ கம்சா வந்து ஏதோ புதிய செய்தியைக் கூறுகிறாளே? தேவகியைப் பார்த்துவிட்டு ஷாயிபாவிடம் வந்த கம்சா அப்போது நடந்த ஆலோசனைக் கூட்டத்தின் மூலம் மதுராவின் வீரர்களுக்கும், இளைஞர்களுக்கும் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் புதியதொரு ஆபத்தைப் பற்றி அவளிடம் கூற ஆரம்பித்தாள். இதைக் குறித்து ஷாயிபாவிடம் கூற ஆரம்பித்த கம்சா ஓவென்று அழ ஆரம்பித்தாள். தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு, அந்தப் பொல்லாத போக்கிரியும் துஷ்டனும் ஆன கிருஷ்ணன் எப்படித் தன் அன்புக்குகந்த யுவராஜா பதவி வகிக்க வேண்டிய ப்ருஹத்பாலன் மேல் வஞ்சம் தீர்த்துக்கொண்டான் என்பதை விவரிக்க ஆரம்பித்தாள். தன் தகப்பன் உக்ரசேனர் உண்மையில் ப்ருஹத்பாலனுக்கே யுவராஜா பதவி அளிக்க விரும்பியதாகவும், இந்தக் கண்ணன் வந்ததும் அனைத்தும் மாறியதோடு அன்றி இப்போது புதியதொரு சூழ்ச்சி வலையை கண்ணன் பின்னி இருப்பதாயும் கூறினாள். தான் மகனை மரணத்தை நோக்கி அனுப்ப வேண்டியே அவனுக்கு யுவராஜா பதவியும் பட்டமும் கொடுக்கக் கண்ணன் சம்மதித்திருப்பதாயும், குண்டினாபுரம் சென்றால் தன் மகனுக்குக் காத்திருப்பது மரணமே என்றும் தீர்மானமாய்க் கூறினாள் கம்சா.
கம்சாவின் புலம்பல் தொடர்ந்தது. அவள் கணவன் தேவபாகனோ அல்லது மூத்த மகன் ஆன சித்ரகேதுவோ இந்த வழிக்கெல்லாம் வரமாட்டார்கள் இருவரும் தேவைக்கு மீறிய நல்லவர்கள். அவர்கள் வசுதேவன் சொல்லை ஒருக்காலும் மீறி நடக்க மாட்டார்கள். ஆகவே அவர்களிடம் போய் இதைச் சொல்ல முடியாது. அவளுடைய இன்னொரு இளைய மகனான உத்தவனோ கேட்கவே வேண்டாம். அந்தக் கிருஷ்ணனுக்கு அடிமை உத்தியோகம் செய்கிறான். அவனுக்குத் தாசானு தாசனாக இருக்கிறான். அவனைக் கண்ணன் தன் வேலைகளுக்கெல்லாம் ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொள்கிறான். ஷாயிபாவுக்கும் இதே எண்ணமே தோன்றியது. உத்தவனைக் கண்ணன் தன் இஷ்டத்துக்கு வளைக்கிறான் என்று அவளும் எண்ணினாள். அவள் முகபாவத்தையே கவனித்த கம்சா இதுதான் சமயம் என நினைத்து ஷாயிபாவைக் கட்டிக்கொண்டு இன்னும் புலம்பி அழ ஆரம்பித்தாள்.
Subscribe to:
Posts (Atom)