Tuesday, April 12, 2016

கண்ணன் வருவான் ஆறாம்பாகம்! வேத வியாசர்!


அடுத்து நாம் இப்போது பார்க்கப் போவது வேத வியாசர் குறித்த சில தகவல்களை! வேத வியாசரை நாம் அறியாமல் இல்லை. அவரைக் குறித்து இப்போது புதிதாக என்ன என யோசிக்கலாம்.நம்முடைய கிருஷ்ணாவதாரம் குறித்த தொடர்களுக்கே வேத வியாசர் தான் முன்னுரையாகவும் முகவுரையாகவும் அமைந்துள்ளார். அவரில்லாமல் பாரதமோ, பாகவதமோ இல்லை. கண்ணன் உபதேசித்த கீதையில், “அனைத்து ரிஷிகளிலும் நான் வேத வியாசனாக இருக்கிறேன்!” என்று கூறி இருப்பதிலிருந்தே இவரின் மகத்துவம் நமக்குப் புரியவரும். கிருஷ்ணனின் வாழ்க்கையும் அவன் சாதித்த சாதனைகளுக்கும் ஊடே, அல்லது அடிப்படையில் வேதவியாசரின் வாழ்க்கையும் ஒரு மெல்லிய சரடாக ஓடுகிறது. வேத வியாசரின் பிறப்பு குறித்து மஹாபாரதத்தில் மிகக் கொஞ்சமாகச் சில குறிப்புகள் கிடைக்கின்றன. அதன் பின்னர் கிட்டத்தட்ட அறுபது முழு வருடங்களுக்குப் பிறகே அவரின் இருப்பு குரு வம்சத்தினரின் ஆசாரியராக, குருவாக, அவர்களின் நல்வாழ்க்கைக்குப் பாடுபடுவராக, வேதங்களை மீண்டும் தொகுத்து அளித்தவராக தர்மத்தின் தலைவராக, தர்மமே அவராகத் தோன்றுகிறார். அவரின் உபதேசங்களும், ஆலோசனைகளும் குரு வம்சத்துப் பெரியோரால் ஏற்கப்படுகிறது.
வேத வியாசர் மஹாபாரதப் போரை நேரில் கண்டவர்! அதன் பின்னரே அவர் இந்த மஹாபாரதத்தின் நிகழ்வுகளை எழுதினார் என்பார்கள். இதில் பல இடைச்செருகல்கள் உண்டு என்கின்றனர். ஆனால் மூலம் வியாசருடையது தான் என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடு இல்லை!
இப்போதைக்கு ஆரம்பிச்சு வைச்சிருக்கேன். இதிலே முக்கியமான சிலது குறித்துப் படித்துப் புரிந்து கொண்டு மீண்டும் வருகிறேன்.

2 comments:

ஸ்ரீராம். said...

மிகப்பெரிய பணியைச் செய்கிறீர்கள். தொடர்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

வியாசாய விஷ்னணு ரூபாய
வியாச ரூபாய விஷ்ணவே.